Tuesday, August 16, 2011

பதஞ்சலி யோக சூத்ரம்**





முன்னுரை - என்னுரை

யோகத்துக்கு தமிழில் பொருள் செய்வதோ , பாடலாக வடிக்க வேண்டும் என்பதோ இந்த முயற்சியின் நோக்கமன்று.

காலத்தில் அழியாத யோகத்தை ஏதோ ஒரு கால கட்டத்தில் (வேறு பிறவியில் கூட)  மேற்கொண்டு இறையுடன் கலப்பது தவிர்க்க முடியாத ஒன்று.

இதன் காரணமாக பதஞ்சலி யோக சாஸ்திரத்தை  ஊன்றிப் படிக்கலானேன். அப்போது எடுக்கும் குறிப்புகளாக (நோட்ஸ்) இதை எழுதுகிறேன். இந்தக் குறிப்பு யோகம் செய்ய முனயுங்கால் (முனைந்தால் !) எனக்குப் பயனுறும் என்று கருதுகிறேன்.

இதற்குப் பல புத்தகங்கள் படித்தும் குறிப்பாக கீழ்க்கண்ட தமிழ்ப் புத்தகம் பெரிதும்  துணை புரிந்தது.

பதஞ்சலி    விளக்க உரை : சுவாமி சச்சிதானந்தா.
 வானதி பதிப்பகம். தி நகர். 
கீழ்க்கண்ட இணையப் பக்கம் சமஸ்க்ருத வார்த்தைகளின் பொருள் அறிய உதவிற்று.
Thanks to :
The english translation quoted in this work has been culled out from this site.  http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/

இந்த உந்துதலை எனக்களித்து என்நினைவில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தந்தைக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.

I miss you Dad..!
I wish I had you by my side to guide me..!
I hope you are ... !
   ஸ்ரீதரன்..!
---------





பத்தரின் சித்தத்தின் ஐயம்களை அறிவோ 
சித்தரின் வித்தையை அறிந்தெழுமத் திறமோ
பெற்றிலன் ஆயினும் தமிழினில் பரம 
வித்தராம் பதஞ்சலி யோகத்தின் சிரம 
சூத்திரம் யாவையும் இனித்திடத் தரவே
முந்தினேன் வித்தவி நாயகத் தருவே
வந்துனை வேண்டினேன் மெய்ப்பொருள் அறிவே
சிந்தனை விட்டுநீ எனக்கருள் குருவே ..!
----------


சுழுமுனையா லெழுவிசையால் விழுமனதை ஏற்றிப்பாழும்
கழுமதியா லெழுபிணியால் விழுமுடலைத் தேற்றிஊழின்
பழிசாரா பதஞ்சலியார் யோகதீப மேற்றிவாழும்
வழிவகையான் தொழும்செயலால் ஈசனைநீ போற்று போற்று ..!
----------

தொற்றிநாம் பின்னேசென்று தேடிடத் தகுந்த ஒன்று
காற்றிலே படர்ந்துசென்று இதம்தரும் மணமதன்று
கூற்றிலே கலந்துநின்று குளிர்தரும் வாக்குமன்று 

சேற்றிலே மலர்ந்திருந்து எழில்தரும் மலருமன்று
பற்றிலே சேர்ந்திருக்கும் உடல்பெறும் சுகமுமன்று 
சோற்றினை அரைத்தரைத்து நாவுறும் சுவையுமன்று 
பிறிதொரு உருவமற்று நிறைஉறு பரமன்என்று
புகன்றிடும் யோகமின்று பதஞ்சலி கூற்றில் நன்று
பயின்றிட தீபமொன்று சுடர்விடும் சஹஸ்ரத் தின்று .. !

-----------

பதஞ்சலி யோக சூத்ரங்கள் கீழ்க்கண்ட நான்கு பாதங்கள் அதாவது பாகங்களாகப் பகுத்துத் தரப்பட்டுள்ளன 
1.சமாதி பாதம் : மனது பூரண அமைதிப்படும் நிலை  சமாதி எனப்படும். அந்த பூரண அமைதி நிலையை நேராக,உணர்வு பூர்வமாக,சரியாக உண்மையைக் காணும் அனுபவ நிலை என்று சொல்லலாம். 51 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , யோகத்தைப் பற்றியும்,சமாதி நிலையைப் பற்றியும் அந்த நிலையை எட்டும் முறையைப் பற்றியும் பதஞ்சலி முனிவர் விளக்குகிறார்.
2.சாதனா பாதம்: 55 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , ஒரு சாதகன் மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் விவரிக்கப் படுகின்றன.
இதில் பதஞ்சலி முனிவர் க்ரியா யோகம் , அஷ்டாங்க யோகம் ( எட்டு அங்கங்களையுடைய யோகம்) இரண்டு யோக முறைகளைப் பற்றிக் கூறுகிறார். 
க்ரியா யோகம் என்பது தவம்,இறை நூல்களைக் கற்பது,இறைவன் மேல் பக்தி ஆகிய மூன்றைப் பற்றி பேசுகிறது.
அஷ்டாங்க யோகம் கீழ்க்கண்ட எட்டு யோக அங்கங்களைப் பற்றி கூறுகிறது. கீழ்க்கண்டவற்றில் முதல் 5 அங்கங்கள் சாதனா பாதத்திலும் கடைசி மூன்று அங்கங்கள் விபூதி பாதத்திலும் விவரிக்கப் படுகிறது. 
1.யமம் : (செய்யக் கூடாதவை)
அஹிம்சை(கொல்லாமை),பொய் பேசாமை,கள்ளாமை,பிரம்மச்சர்யம்(வேதம் விதித்தபடி இறை நினைவில் வாழ்வது மற்றும்  உடலாலும் மனதாலும் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்ளாமை),அபரிகிரகா - தேவைக்கு மேல் பொருள்களின் மீது ஆசைப்படாமை
2:நியமம்:(செய்ய வேண்டுபவை)
தவம்,ஆன்மீகக் கல்வி, இறைவன் பேரில் பக்தி 
3.ஆசனம்:
ஆசனம் என்பது எப்படி அமர்வது என்றும், எதன் மீது அமர்கிறோம் என்ற இருக்கை ஆகிய இரண்டையும் குறிக்கும். பதஞ்சலி முனிவர் எப்படி அமர்வது என்று குறிப்பிடுகிறார். திடமாகவும் சுகமாகவும் இருக்கும் படி அமர்ந்து தியானம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும் ஆசனங்கள் என்பது உடற்பயிற்சிக்காக செய்யும் ஆசனங்களையும் குறிக்கும் இவை யோகாசனம் எனவும் குறிப்பிடப்படும்.
4.பிரணாயாமம்: மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவது: மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஸ்தூல உடலையும், சூட்சும மனதையும் இணைக்கும் கருவியைக் கட்டுப்படுத்துவதாகும்.
5.பிரத்தியாகாரம்: பிரத்தியாகாரம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்துவது ஆகும். அறிவைக் கொடுக்கும் ஐம்புலன்களான மெய்,வாய்,செவி,மூக்கு,கண் முதலியனவைகளையும் செயல் புலன்களான, கை,கால்,வாக்கு முதலியனவைகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும். ஐம்புலன்களை மூன்று செயல்களுக்குப் பயன்படுத்தலாம். அவை அன்றாட நடைமுறை செயல்களுக்காக அதாவது வியவாகரம், வாகனம் ஒட்டும் பொழுது பார்ப்பது போன்றவை, இரண்டாவதாக இன்பத்திற்காக மூன்றாவது நல்லவைகளுக்காக. வியவாகரத்திற்காக இவைகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. ஆனால் இன்பத்திற்காகப் பயன்படுத்தும் பொழுது இவைகளை நல்லவைகளுக்காகப் பயன்படுத்த இயலாமல் போய்விடும். அதலால் இன்பத்திற்காகப் பயன்படுத்துதல் குறைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
6.தாரணம்: ஒரு இடத்தில் மனதை பொருத்துதல். சூட்சுமமான இடங்களில் மனதைப் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல் தாரணம் எனப்படும். இது ஆலம்பனம் எனவும் அறியப்படும்.
7.தியானம்: ஆலம்பன இடத்தில் பொருந்திய மனதை தொடர்ந்து அங்கேயே நிலை நிறுத்தச் செய்யும் முயற்சியே தியானம் எனப்படும். பல எண்ண ஒட்டங்கள் வந்து நிலைநிறுத்தும் முயற்சியை சிதறச் செய்யும். அவற்றைக் கடந்து நிலை நிறுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்வது தான் தியானம் எனப்படும்
8.சமாதி: தியானத்தில் ஒரு முகப்படுத்திய மனதை அதே நிலையில் தொடர்ந்து வைத்தல் சமாதி ஆகும்.இப்படி இடையறாமல் தொடரும் சமாதி நிலையில் த்யானிப்பவர்,த்யானிக்கப் படும் பொருள்,த்யானம் மூன்றும் மறைந்து ஒன்றாகும் நிலை ஏற்படும்.

 3.விபூதி பாதம்: 56  சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் ,யோகத்தால் கிட்டும் சித்திகள் சொல்லப் படுகின்றன. இந்த பாகத்தில். அஷ்டாங்க யோகத்தின் தாரணை,தியானம்,சமாதி என்ற மூன்றும் விவரிக்கப் படுகின்றன.

4.கைவல்ய பாதம்: 34  சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் மோக்ஷம் பற்றி பேசப்படுகிறது


இறை வணக்கம் 



------------------------------------------------

சமாதி பாதம்



விழிப்புணர்வு
Enlightenment 







சாதன பாதம்
பயிற்சி
Practice


சாதனைத் தொடக்கம் & முடுக்கம்







சாதனை கொடுக்கும்



விபூதி பாதம்
பலன்
Results



விபூதியால் கிடைக்கும் 




(இந்தப் பாடலின் விளக்கம்)


கைவல்ய பாதம்
மோக்ஷம்
Liberation

13 comments:

  1. ஜெயமோகனின் 9 சூத்ரங்களுக்கான விளக்கங்களை படித்துவிட்டு எப்போது மற்ற சூத்ரங்களுக்கான விளக்கங்களை படிக்கமுடியும் என காத்திருந்தபோது, தங்களின் வலைக்குள் வந்து விழுந்து, கவித்துவமான தங்களின் விளக்கங்களை படித்து பேரானந்தம் அடைந்தேன்.
    - ராஜேஷ்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராஜேஷ் .!

    ReplyDelete
  3. ungalul oru kavingyan yengey iththanai nal olindu irundan

    neevir vazga nin korram vazga

    inda punithapayanam thodara iraivanai vendugiren

    pnb

    ReplyDelete
  4. ஆகா, அற்புதம். நல்ல முயற்சி. வாழ்வாங்கு வாழ்க.

    ReplyDelete
  5. பதஞ்சலி யோக சூத்திரம் இந்த புத்தகம் பற்றி தகவல் ஏதும் சொல்ல முடியுமா???

    ReplyDelete
  6. பதஞ்சலி யோகம் BY சச்சிதானந்தா
    வானதி பதிப்பகம்
    http://www.tamilbooksonline.in/searchbooks1.php?code=TA003492&&bookname=PATHANJALI%20YOGAM

    ReplyDelete
  7. அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நெடுங்கால ஆசை .பதஞ்சலி யோக சூத்திரம் பற்றி blogspot போட வேண்டும் என்று .என்னுடைய கனவை நீங்கள் பல மடங்கு நிறைவேற்றி விட்டீர்கள். மிக்க நன்றி. இதுபோல் விஞான பைரவ தந்த்ரா பற்றி பதிவிடுவதற்கு வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. விஞ்ஞான பைரவ தந்த்ரா - முயல்கிறேன்

      Delete
  9. எளிமை புதுமை
    பழமை இனிமை
    கரும்பு தின்ன
    கூலி தந்தும்
    சோம்பலுற்றே
    இருப்பாரென
    கரும்பு சாறெடுத்தே
    தந்தீரே

    ReplyDelete
  10. எளிமை புதுமை
    பழமை இனிமை
    கரும்பு தின்ன
    கூலி தந்தும்
    சோம்பலுற்றே
    இருப்பாரென
    கரும்பு சாறெடுத்தே
    தந்தீரே

    ReplyDelete