Friday, July 24, 2015

1.23 காலமின்றி (காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே)

 
ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத் 
ததோ ஸபி விசேஷ : ||
சாதனையின் தீவிரம்
சாதனையின் தீவிரத்திற்கேற்ப பயன் கிடைக்கிறது. ஆழ்ந்த தீவிரம் விரைந்தும் , மிதமான தீவரம் சிறிது தாமதித்தும் , குறைந்த தீவிரம் தாமதித்தும் பலன் தரும்.
_____________________________
 
காலமின்றி நேரமின்றி சாதனை-செய் மனதே
 சாதனையைச் செய்து-நன்றாய்ச் சென்று-அடை சரணே
சென்று-அடை சரணே
(MUSIC)

கோடிமுறை கூறிவிட்டேன் எந்தனைப்-போல் யாரு (2)
ஓதிப்-பல அவி-சொரிந்தேன் என்னே எந்தன்-பீடு
என்று-உன் நினைப்பிருந்தால் உய்வதெங்கு சொல்-மனதே (2)
ஏழேழு பிறவியிலும் முன்னேற்றம் ஏதுனக்கே
தேறாது உன் பிறப்பே
காலமின்றி நேரமின்றி சாதனை-செய் மனதே
சாதனையைச் செய்து-நன்றாய்ச் சென்று-அடை சரணே
சென்று-அடை சரணே
(MUSIC)
நாளும்… பாழும்-மனம் மாறும் வேறு-ஒன்றைத் தேடும் 
மோகம் கொள்ளும்போது ஏற்றம் என்பதேது
நான்-புரியும் காரியத்தால் என்ன-பலன் பாரு (2)
என்று-நெஞ்சே நினைத்து-விட்டால் ஏற்றம்-கிடையாது
ஏற்றம் கிடையாது
மூவிரண்டு வேளையிலும் பூஜை செய்யும்-போது
தான் என்ற உன் நினைவில்
ஏற்றம் என்பதேது (2)
 
காலமின்றி நேரமின்றி சாதனை-செய் மனதே
சாதனையைச் செய்து-நன்றாய்ச் சென்று-அடை சரணே
சென்று-அடை சரணே
(MUSIC)
உன்-மொழியில் தேன் வழியும் சேவை-ஒன்று போதும்
செய்வது-நான் அல்ல-என்னும் ஓர்-நினைப்பு போதும்
ஓர் நினைப்பு வேணும்
*மெய்-ஒடுங்கி மெய்-விளங்கும் ஞானம்-என்ற போதம் (2)
கேளாமல் பாரு-நெஞ்சே தானாகக் கூடும் தானாகக் கூடும்
காலமின்றி நேரமின்றி சாதனை-செய் மனதே
சாதனையைச் செய்து-நன்றாய்ச் சென்று-அடை சரணே
சென்று-அடை சரணே
(MUSIC)

ஜெய்ஜெய் ராம்-ராம்-ராம் ராம்-ராம்-ராம் ராம்-ராம்-ராம் ராம்-ராம்
ஜெய்ஜெய் ராம்-ராம் ராம்-ராம்

 
 
*மெய்=தான் உடல் என்ற உணர்வு

No comments:

Post a Comment