Thursday, December 31, 2015

1.32. ஆட்டமில்லா ஓர் மனதில் (ஆட்டுவித்தால் யாரொருவர்)



ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா 
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(1+SHORT MUSIC+1)

பார்-நடக்கும் நாடகத்தில் உந்தன் பங்கு (2) 
நீ நடித்தல் கூட புரிந்திடுவாய் பூஜை-என்று
சேவை-தனை நீயும் செய்வாய் பூஜை-போலே 
மேலாம் அன்புதனை ஏற்றிடுவாய் தீபம்-போலே 
அன்பு-மனம் ஒதிடுமே  வேதம்-தானே
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா 
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(MUSIC)
உன்-ஜோலி மானிடத்தின் சேவை ஐயா
என்று-பார்த்தனிடம் சொன்னது-தான் கீதை மெய்யாய் 
பாரிருக்கும் நிலையில்-இன்று உண்மை-பூஜை 
என்றும் அன்பு-கொண்டு துன்பம்-போக்கும் சேவைதானே 
அன்புடனே உதவுதலே மெய்யின்-மெய்யே
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா 
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்
(MUSIC)
உதடுகளில் கொண்டிருப்பாய் இறைவன்-பேரை 
உன்-கைகளிலே கொண்டிருப்பாய் மானிட-சேவை 
வேதத்திலே உள்ளதெல்லாம் இதுதான்-ஐயா 
இதை உணர்ந்து-கொண்டால் உண்மையெல்லாம் விளங்கும் தன்னால் 
உணர்வது-தான் உண்மையிலே த்யானம்-அய்யா
ஆட்டமில்லா ஓர்-மனதில் த்யானம் கொள்வாய் அய்யா 
மாசு-இல்லா பரம்பொருளில் வைப்பாய்-மனதை மெய்யாய்


No comments:

Post a Comment