Monday, February 22, 2016

1.38. எண்ணம் வந்துனைத் தாக்கும் (உள்ளம் என்பது ஆமை)



38. ஸ்வப்ன  நித்ரா  ஜ்ஞானலம்பனம் வா ||
தாக்கம் போக்கும் தூக்கம் 
ஆழ்ந்த தூக்கத்தில் உறும்  கனவுலக அமைதியினை சிந்திக்கவும் மனதில் அமைதி சேர்கிறது
__________________________


எண்ணம் வந்துனைத் தாக்கும் 
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(2)
சொல்-செயல் தூக்கத்தில்-ஏது
நெஞ்சின் ஆட்டம் அதில்-கிடையாது 
(2) 
எண்ணம் வந்துனைத் தாக்கும் 
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(MUSIC)
மாலை-சென்றால் வரும் தூக்கம் 
அதும் இலை-என்றால் மனம் உலை-தான்
(2)
எது இருந்தாலும் தூக்கம் 
இல்லை என்றால் பெரும் தொல்லை (2)
எண்ணம் வந்துனைத் தாக்கும் 
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
(MUSIC)
கரையில் கடல்-ஆர்ப்பரிக்கும் 
அது நடுவில் அமைதியில் உறங்கும்
(2) 
துன்பமும் உறக்கத்தில் மறக்கும்
அதுவாய் மன அமைதியும் பிறக்கும்
(2)
பேய்-மனம் அமைதியில் உறங்கும்
எண்ணம் வந்துனைத் தாக்கும் 
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்
சொல்-செயல் தூக்கத்தில் ஏது
நெஞ்சின் ஆட்டம் அதில்-கிடையாது
எண்ணம் வந்துனைத் தாக்கும் 
அதைச் சற்றே நிறுத்திடும் தூக்கம்





No comments:

Post a Comment