Tuesday, August 23, 2016

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)


Click here for song

https://youtu.be/6rQCM1jo8T0



வெறுப்பு
துன்பம் தரும் அனுபவத்துடன் ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வது தான் வெறுப்பு.அதாவது, துன்பத்தினால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது.
________________

எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது மனமே
(1+SM+1)
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடிக்கணமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
மனித-குலம் போவதந்த இன்பத்தின்-பின்னே
மனித-குலம் போவதென்றும் இன்பத்தின்-பின்னே
அனுபவித்துப் பின்னுரைப்பார் உப்புச்-சப்பில்லே
என்றைக்கும்சிற்..றின்பத்துள்ளே துன்பங்கள்-ஒன்றே
என்பதனை அறிந்த பின்னே துன்பங்கள் இல்லே
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
அகங்கார நினைவிருக்கும் ஆணவத்திலே
தன்மையும்போய் இருண்டிருக்கும் அதனிடத்திலே
உடனே-அது தன் குறையை உணர்வது-ஏது
மனதுக்குத்தான் மறதி என்று மாபெரும் கேடு    
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
நமை-உணர்த்த அன்றோ-அந்த மனம்-பிறந்தது
*சேற்றில்-பொந்த பன்றி-என்றே தனை-மறந்தது
தனை-மறந்த இந்திரன்போல் இன்பம்-தேடுது
** உண்மை-இன்பம் என்னவென்று மறந்து-போனது   
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
கண்ணிருந்தும் பார்வை-சென்ற தன்மை-கொண்டது
அதனால்-தான் துன்பத்தைப்-போய் இன்பம் என்குது
பொன்னாக பொற்குடத்தில் நீரும் ஆகுமா
பானை-அந்த மண்ணென்றாலும் நீரும் மாறுமோ
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-மனமே
எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது-மனமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-உடனே


**அறியாமை இருட்டு உடனே விலகாது. பல பிறவிகளின் தீவிர சாதனையால் கிட்டும் இறை அருள்  தேவை.
**இந்திரன் சாபத்தினால் பன்றியாய்ப் பிறப்பெடுத்து சேற்றில் மூழ்கி அவ்வாழ்வை ரசித்து இருந்தான்
*** பேரின்பம்






No comments:

Post a Comment