Tuesday, April 18, 2017

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)




10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா: ||

முளையிலேயே களை எடு
* சாதனை பாதையில் தடைகளாக வரும் ஐந்து  சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
____________________-

கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
*ஐந்தெனவே ஐந்தெனவே இருந்திடும் எனத்தாம்மா
சொல்லிச்-சென்றார் சொல்லிச்-சென்றார் பதஞ்சலி பெருமானார்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
நிஜமறியாமை-ஒன்றாலே மதி-தடுமாறும் தன்னாலே (2)
யாரென்ற-போதும் உடலினில்-பற்றும் மரணத்தின்-பயமும் தோன்றும்
அறி..யாமை-ஒன்றாலே பலப்பலத்-தடைகள் சாதனை-வழியை மூடும்
 கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
ஆணவம்-ஆசையும் வந்தாலே யார் சொன்னாலும்-நல்லதைக்-கேளாதே  (2)
மனதினில்-வெறுப்பும் தோன்றிடும்-அதுவும் மயங்கிடுமே-கொஞ்சமேனும்
பின்னர் சாதனை-வழியில் சென்றிட-அதற்கு தோன்றிடுமா-எண்ணிப்பாரும்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா




No comments:

Post a Comment