Tuesday, April 18, 2017

2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)


9. ஸ்வரஸவாஹூ விதுஷோஸ்பி
ததாரூடோஸ பிணவேக  : ||

உயிரின் மீது  பற்று 
உயிரின் மீது  பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.
_______________________
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா
(MUSIC)
தொட்டால் சுடும்-பயம் நெருப்பாலே
தொடாமல் தெரியுது பின்னாலே
செத்தால் உடல்-பயம் எதனாலே
செத்தாச்சு பலதரம் அதனாலே
மரணம்-போக்குது உயிரம்மா
(MUSIC)
பிழைக்கணும் என்றே நினைத்திருக்கோம்
பயத்துடனே என்றும் வாழ்ந்திருக்கோம்
கொடுத்திடுவாய் என்றே எமன் கேட்டால்
எடுத்துச் செல்வாய் என்றா கொடுத்திடுவோம்
மரணம்-போக்குது உயிரம்மா
 (MUSIC)
உடலை-நினைத்தே வாழ்ந்திருக்கோம்
அது உலகில்-நிலைத்தே வாழ்ந்திடுமோ
முன்பே பலமுறை இ றந்திருக்கோம் அதில்
மரணத்தின் பயம்-நமை விடுவதில்லை
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா


No comments:

Post a Comment