Sunday, November 6, 2011

ஒளி மயம்






யோக நெறிப்படி ஜீவாத்மாவாகிய பெண் பரமாத்வாகிய புருஷனை அடைதலே முக்தி.
அவ்வாறு இறை அநுபூதி பெற்ற ஒரு ஜீவாத்மாவின் முக்தி கல்யாண ஊர்வலம்.

ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 
த்யானத்தில் இறைஒளித் தோற்றம் எழுந்து நம்பிக்கை அளித்தல்.

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது 
உலகமெங்கும் நிறைந்திருக்கும் ஓமெனும் பிரணவ நாதம் சாதனையில் முதிர்ந்த சாதகனின் காதில் ஒலிக்கிறது 

நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
அந்த நாயகன் தானும் வானில் இருந்தே பூ மழை பொழிகின்றான்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் 
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் 

இறை அநுபூதி பெற்ற சாதகன். கடை நிலையில் முதிர்ச்சி பெற்ற ஜீவாத்மாக்கள் உறையும் உலகில் (நால் வகைப் பட்ட மதத்தினரும் அங்கு தான் கடைசியில் இருப்பர்) வாழ்ந்துப் பின் உரிய காலத்தில் இறை சேரச் செல்கிறான். அத்தருணத்தில் மற்ற ஆன்மாக்கள் அதைக் கோலாகலமாகக் கொண்டாடுவர். 
40 கோடி தேவர்களும்  = 33 வகைப் பட்ட தேவர்களும் + சப்த ரிஷி களும் (சமஸ்க்ருதத்தில் கோடி என்றால் வகை என்று பொருள் ), 
தேவர் தலைவன் இந்திரனும் வானில் இருந்தே பூ மழை பொழிகின்றான்
ஏன், இறைவனே பூமழை பொழிந்து கைவல்யத்துக்கு அழைத்துச் செல்கின்றான்.


40 கோடி = 33 வகையில் பட்ட தேவர்களும் + சப்த ரிஷி களும் (சமஸ்க்ருதத்தில் கோடி என்றால் வகை என்று பொருள் )
கலை மகள் : யோகக் கலையில் இடை பிங்கலை வென்றவர் .

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக 
குங்குமச்சிலை = இறை அனுபூதியில் பழுத்துச் சிவந்து திரண்ட ஜோதி.

எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்களச்செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக 
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

குலமகள், காவல் தெய்வம் கண்ணகி = இறை அனு பூதி அடைந்த சாதகனின் தலை முறை இறை உணர்வில் உந்தப்பட்டு முக்தி ஆசைப் பெறுகிறது.

சாதகன் தடுத்தாட்கொள்ளும் கடவுள் நிலைக்கு உயர்ந்து வீட்டை மணம் பெறச் செய்கின்றான்
விதேக முக்த நிலையில் சாதகனின் ஞானத்தால் நாட்டில் பக்தி மணம் கமழ்ந்து வளர்ச்சி அடைகிறது.

அங்கயர்க் கண்ணி = 
அனுபூதியினாலே ஜோதி மயமான உடல் முழுதும், உணரும் ஞானக் கண்ணாய்ப் மாறுகிறது

No comments:

Post a Comment