Showing posts with label கண்படுமே பிறர் கண்படுமே. Show all posts
Showing posts with label கண்படுமே பிறர் கண்படுமே. Show all posts

Tuesday, April 18, 2017

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)




10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா: ||

முளையிலேயே களை எடு
* சாதனை பாதையில் தடைகளாக வரும் ஐந்து  சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
____________________-

கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
*ஐந்தெனவே ஐந்தெனவே இருந்திடும் எனத்தாம்மா
சொல்லிச்-சென்றார் சொல்லிச்-சென்றார் பதஞ்சலி பெருமானார்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
நிஜமறியாமை-ஒன்றாலே மதி-தடுமாறும் தன்னாலே (2)
யாரென்ற-போதும் உடலினில்-பற்றும் மரணத்தின்-பயமும் தோன்றும்
அறி..யாமை-ஒன்றாலே பலப்பலத்-தடைகள் சாதனை-வழியை மூடும்
 கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
ஆணவம்-ஆசையும் வந்தாலே யார் சொன்னாலும்-நல்லதைக்-கேளாதே  (2)
மனதினில்-வெறுப்பும் தோன்றிடும்-அதுவும் மயங்கிடுமே-கொஞ்சமேனும்
பின்னர் சாதனை-வழியில் சென்றிட-அதற்கு தோன்றிடுமா-எண்ணிப்பாரும்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா




2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)



வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(2)
என்பதுவே என்பதுவே பதஞ்சலி-பெருமானார்
சொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
காடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)
வாழ்ந்திடும்போதே பூமியில்-பலபேர் சாவதைக்-கண்டதனோடு
பல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
 (MUSIC)
எங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)
*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்
இந்த மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின் பயமும்
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா

*Auto biography of a Yogi Chapter 42 – Last days with my Guru

For a moment, Master trembled like a frightened child. ("Attachment to bodily residence, springing up of its own nature [i.e., arising from immemorial roots, past experiences of death]," Patanjali wrote,5 "is present in slight degree even in great saints." In some of his discourses on death, my guru had been wont to add: "Just as a long-caged bird hesitates to leave its accustomed home when the door is opened.")