Showing posts with label பிச்சாண்டி தன்னைக் கண்டு. Show all posts
Showing posts with label பிச்சாண்டி தன்னைக் கண்டு. Show all posts

Tuesday, September 27, 2016

31. எல்லாமும் உள்ளே உண்டு (பிச்சாண்டி தன்னைக் கண்டு )




எல்லாமும் உள்ளே-உண்டு கண்டு கொள்ளுங்கள் 

எங்கும் இருக்கும் பரம்பொருள்- தாள் கண்டு உய்யுங்கள்
(SM)
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
எச்சமயத்தும்-மனத்தில் அன்பு வையுங்கள்
சென்று நல்ல-குரு..விடத்தில்யோ-கம் கல்லுங்கள்
*அந்த ஈசனது யோகம்-கொண்டு நன்கு-உய்யுங்கள்
உங்கள் கையிரண்டு கொண்டு-என்றும் தொண்டு செய்யுங்கள்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
எப்பவும் முடியாது இன்று-செய்யுங்கள்
அப்போதைக்..கிப்போதே நன்று-செய்யுங்கள்
(Very Short Music)
பித்தனைப் போல் நாளும் தேம்பி-அழுங்கள்
இப்போதே அவன் தாளைத் தேட-எழுங்கள்
(VVSM)
புத்தியெனும் கத்திதனைக் கையிலெடுங்கள்
மெய்யில் ஒட்டியுள்ள கேடு-தன்னை  வெட்டி-விடுங்கள்
மெய்யின் *ஐம்புலனின் தேடுதலை வெட்டி-விடுங்கள்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
ஆண்டவன் என்று-சிலை தன்னை-அழைத்தோம்
வேண்டிப் பொருள்-ஒன்றே அங்கு-விழைந்தோம் 
நம்மிடத்தில் உள்ளதய்யா நல்ல செல்வம்
பொன் ஆத்திரத்தில் மறந்து-விட்டோம் ஐயோ-பாவம்
பொன் ஆத்திரத்தில் இழந்து-விட்டோம் ஆன்ம-லாபம்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
ஐம்புலன் ஆசை-பின்னால் பறந்து-சென்றோம்
அங்குக் கையேந்திப் பிச்சை-சிறு இன்பத்தைக் கொண்டோம்
ஐம்புலன் ஆசை-பின்னால் பறந்து-சென்றோம்
அது கோலோச்சிப் பிச்சை-தந்தால் பெற்றுக்-கொள்கின்றோம்
ஐந்தறிவாக-அந்தோ நடந்து கொண்டோம்
நாம் பேரின்ப-ரூபம் அதை மறந்து-விட்டோம்
நாம் தான் ப்ரம்ம ரூபம்-அதை உணர்ந்து கொள்வோம்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்


*அந்த ஈசனது யோகம்=சிவபெருமான் அருள யோக ஞானத்தைப் பதஞ்சலி முனிவர் ஈசனிடமிருந்து நேரடியாகப் பெற்றார்
*அத்தனை =அப்பனை-பெருமானை

*ஐம்புலனின் தேடுதல்=புலன் வழிச் சிற்றின்பம் 


FIRST PAGE