Showing posts with label மகாராஜன் உலகை ஆளலாம். Show all posts
Showing posts with label மகாராஜன் உலகை ஆளலாம். Show all posts

Friday, September 16, 2016

26. எதால் அந்த விதியை வெல்லலாம் (மகாராஜன் உலகை ஆளலாம்)



எதால்-அந்த விதியை வெல்லலாம்
சொல்லு எதால்-பந்தச் சதியை-வெல்லுவாய்
எதால்-அந்த விதியை-வெல்லலாம்
(VSM)
பிறந்து-வாட இறந்து-ஓட என்று-உலகில் வாழலா
அதனை-வென்று பிறவி-நின்று முடிவை-என்று காணலாம்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
அதில் சதா-நீயும் த்யானம் கொள்ளுவாய்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
(VSM)
அவனைக்-காண அதனைப்-பூண அறிஞர்-யாரும் கூறினார்
உடலைத்-தள்ள எமனை-வெல்ல இதனைத்-தானே கூறினார்
யோகம்-பூணக் கூறினார்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
 (MUSIC)
நாலு-பக்கம் வினைகள்-சாட ஜீவனும்-அஞ்சும்
அதன்-நடுவினிலே சென்றிடுமோ யோகத்தில்-நெஞ்சம்
வீண்-கலக்கம் பயத்தினையே விட்டிடு-கொஞ்சம்
நல்ல-குருவினையே தேடி-அடை அவரடி தஞ்சம்
ஏதந்த  குரு எனக்கும்
  பார்ப்பாய் வழி கிடைக்கும்
யோகத்தை உரை எனக்கும் 
நேரம் அதைக்-கொடுக்கும்
ஆ..
எதால்-அந்த விதியை-வெல்லலாம்
(MUSIC)
கண்ணன்-அன்று கீதையிலே சொல்லவில்லையா
அது-பார்த்தனுக்கு மட்டும்-இல்லை நமக்கும்-தானய்யா
 எள்ளளவும் இல்லை-ஞானம் எனக்கு-கீதையா
என்னை எள்ளல்-விடும் புரிவது-போல் ஒன்றைச் சொல்லையா 
கீதையது பொது-எவர்க்கும்
அதை-எது புரியவைக்கும்
உன்னறிவு அதைக்-கொடுக்கும்
முயல்கிறேன் நன்றி-உனக்கும்
ஆ..

எதால்-அந்த விதியை-வெல்லலாம்…