Showing posts with label ஸ்ரீகணேசா. Show all posts
Showing posts with label ஸ்ரீகணேசா. Show all posts

Wednesday, September 28, 2016

38. தாள் வராதா (ஸ்ரீகணேசா)





கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(2)
நானுள்ளே பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-எனைப் பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-தனைப் பார்த்தால் நீ உண்மை பார்ப்பாய்
என-முனி பதஞ்சலி சொல்லி..னாரய்யா  
நானாய் எனை-நான் பார்த்தல்-நி..கழுமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
இப்புவிச் சுகம்-தனை முற்றும் துறந்தால் (3)
பக்தரின் நெஞ்சினில் ஜோதி-தோன்றுமாம்
சொன்ன படியெல்லாம் எனக்கு நடக்குமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
கொக்குடை மனத்தால் சிக்கெனப் பிடித்தால் (3)
சிக்கிடு..வாய்-என மணிவா..சகனார்
சொன்னபடியெலாம் எனக்கு முடியுமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
சத்சங்க சாதுக்கள் தன்னுடன் இருந்தால் (3)
கொஞ்சமேனும் சிதானந்தம் பெறுவாய்
என்று-உரைத்தால் எனக்கும் பொருந்துமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஸ்ரீ-கைலாசபு..ரம்-அது வேண்டாம்
ஸ்ரீ-வை..குண்..டத்தில்பதவியும் வேண்டாம்
ஸ்ரீ-கைலாச-வை..குண்டமும் வேண்டாம்
என் மனக் கண்ணின் முன்னே உன் தாள் காட்டிடு ஈசா
 என் ஜெபப் பலனாய் பாதம்-எழாதா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள் (2)
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது
உன்னடி எழுமா தயை புரி  தேவா.. என்னுளே வா வா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(4)

ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள்
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது =
1) உன்னுடைய திருவடியை நினைப்பதை ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்கள் தடுக்கின்றன. நீ அவ்வெண்ணங்களை , உன் திருவடி நிழலால் எழாமல்  தடுத்திடு
2) உன்னுடைய திருவடி நினைப்பு  ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்களைத் தடுக்கிறது . எனவே உன் திருவடியை என் த்யானத்தில் காட்டிடு.



Sunday, September 25, 2016

33. கால நேரம் அதற்கிலை(ஸ்ரீகணேசா)





கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
அம்மா சுவாசிக்க நேரம்-உண்டோ
*1 ஸ்ரீ-பரமாத்மா உடனுறை ஆத்மா
ஸ்ரீ-பரமாத்மா உடலுடன் ஆத்மா
ஸ்ரீ-பரமாத்மா உள்ளுறை ஆத்மா
என்று-நீ உணர்ந்திடு வாழ்க்கையில்-சதா
ஆஹா உணராய் நீ-பரமாத்மா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 எட்டென பதஞ்சலி சொன்னது கேளாய்
எட்டங்கம்-யோகத்தில் உள்ளது பாராய்
அட்டாங்க-யோகத்தில் சொன்னது பூணாய்
சத்துடன் உன்னை-நீ சேர்க்கப் பாரடா
செத்தப் பிறப்பெல்லாம் உனக்கு ஏனடா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
கொக்கென மனத்தால் *2 தாரணை பூணாய்
கொக்கென மனத்தால் நீ-நிஜம் தேடாய்
கொக்கென மனத்தால் பூரணம் தேடாய்
அந்த *3 யம-நியம ஆசனம் முதலாய்
ப்ராண நியம-ப்ரத்யா..ஹரமும்-பூணடா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-பயிலாய்
சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-முயலாய்
சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-முடிவாய்
*4 கொஞ்ச-நேரம் *இலானுடன் இருப்பாய்
*5  சித்த விசாலமாய் த்யான த்தைப் பூணுவாய்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 ஸ்ரீ-கை..லாசமும்-உன்..னுள்..ளே-தான்
ஸ்ரீ-வை..குண்டமும் உன்..னுள்..ளே-தான்
ஸ்ரீ-கைலாச-வை..குண்டமுள்ளேதான்
*6 வெளியினில் உள்ளதெல்லாம் இருக்கு-உன் உள்ளேயே-தான்
நீ-இதை உணராய் உள்-சென்று பாராய்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
*7 ஈசா-ஈசனே என்று-நீ அணு கணம்
ஈசா-ஈசனே என்று-நீ அனு-கணம்
ஈசா-ஈசனே என்று நீ அனு தினம்
*ஸ்வாமியின் பிணைப்புச்-சமாதியில் கூடணும்
அதன்-பின்னர் நேரம் இருக்குதா கூறாய்
*8 எப்பவும் நீ-தான்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
(4)
*1 ஸ்ரீ பரமாத்மா உடனுறை ஆத்மா=த்வைதம்
ஸ்ரீ பரமாத்மா உடலுடன் ஆத்மா= விசிஷ்டாத்வைதம் (Adhwaitham with attribute - Brammam with attribute)
ஸ்ரீ பரமாத்மா உள்ளுறை ஆத்மா=அத்வைதம்


The doctrine of trinity of christianity
I and the Father are one. I am in My Father and you are in Me and I am in you. (Jesus – John 10:30 ; 14:20)



Identify Dhwaithaadhwaitham from this picture ..!

The unity of faiths is adhwaitham too..!

*2 தாரணை = Concentration

அட்டாங்க யோகம்  :
*3  யமம் = Moral Code
நியமம் = Self Purification (of mind)
ஆசனம் = Posture
ப்ராணாயாமம் = Channelizing life force
ப்ரத்யாஹரமும் = Withdrawal of mind from senses
*தாரணை = Concentration
த்யானம் = Deep meditation
சமாதி = Union with the object of meditation

*4  கொஞ்ச-நேரம் *இலானுடன் இருப்பாய் = வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (Concentrate on God-try..!)
முதலில் கொஞ்ச நேரம் தான் த்யானம் (சமாதியின் முதல்-நிலை) கூடும்.


*5 நெஞ்ச விசாலம் த்யானம் பூணுவாய்
Concentration on God , expands your conciousness (நெஞ்ச விசாலம்). மெய்ஞ்ஞானப் பெருவெளி விரிய,அதில் பயணிப்பதே த்யானம்-தான்.

*6 வெளியினில் உள்ளதெல்லாம் இருக்கு-உன் உள்ளேயே தான் = அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு

*7 ஈசா ஈசனே என்று =சிவனே என்றிருத்தல்,

*ஈசா ஈசன் = தேவாதி தேவன்

  ஈசா ஈசனே என்று நீ அணு கணம் = அணுவுக்கும் அணுவின் பாகமாக இருக்கும் கால நேரத்திலும் இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு கணம் =அவ்வாறான ஒவ்வொரு(அனு )  'அணு கணப் பொழுதும்' இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு தினம்= இவ்வாறான அணு கணங்களாலான ஒவ்வொரு தினத்திலும் (சதா..) இறை நினைவு

*ஸ்வாமியின் பிணைப்புச் சமாதியில் கூடணும் = “இறை நினைப்பு” சமாதியல்ல - இறைவனுடன் நம் நினைப்பைப் பிணைப்பதுதான் சமாதி. (Supra Conciousness). பிணைத்து நினைப்பே இறைவனாக மாறி நினைப்பு,நினைப்பவன் நினைப்பது (இறைவன்) மூன்றும் ஒன்றாகப் பிணைவதே சமாதியாகும். ( I know, it is a very crude definition of Samaadhi,.. but I’ve tried with my limited understanding.. கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்..!)

*8 எப்பவும் நீ தான் = மோக்ஷத்தின் பின் , இறைவனுடன் கலந்து ஆதியாக மாறியபின் எப்பவும் (ஆதி) எங்கும் நீ (நான்-என்ற தன்னுணர்வு) மட்டும் தான்