Friday, July 3, 2015

1.16. நீ வேறு அல்ல (காவேரி ஓரம்)

 
 
(காவேரி ஓரம்)




நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
இந்த மறைகூறும்-உண்மை மறவாத-நெஞ்சை
திடமான நிலை கூடுமாம்-அதிலே வைராக்கியம் உருவாகுமாம்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
(MUSIC)



பொருள்வேண்டி நீயும் புரிகின்ற-போது அது-பூஜை என-ஆகுமா
அவனின் அருள்வேண்டி-நெஞ்சே அழுகின்ற-நிலையைத் தரவேண்டி நீ கோருவாய்
சேவை தனின்-யாகத் தீ-மூட்டுவாய் அன்பை அவியாக அதில்- ஊற்றுவாய்
இந்த உலகான-மாயை தருகின்ற-ஆசைத்
தளை-போக்க அருள் கோருவாய் அதிலே வைராக்யம் வரக் காணுவாய்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
(MUSIC)


எது-உண்மை என்று புரியாத-போது அவன்-பாதம் தனை-நாடுவாய்
செய்கை பலன்-யாவும் அவனின் பதம்-தன்னில் பெய்து
*உனதானச் செயல் கொள்ளுவாய்
அன்பின் மொழிபேசி இனிப்பூட்டுவாய்
சேவை தனைக் கையில் நீ-பூணுவாய்
இந்த இரு-போதம் போதும் திரு-வேத சாரம்
இது காட்டும் வழி நாடுவாய்-உந்தன் இலக்கை-நீ போய்ச் சேருவாய்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
 
*அவன்= இறைவன் *உனதானச் செயல்=கடமை
 
 _____________
 

No comments:

Post a Comment