Showing posts with label அந்தரங்கம் நானறிவேன். Show all posts
Showing posts with label அந்தரங்கம் நானறிவேன். Show all posts

Tuesday, September 27, 2016

30. என்ன அந்த அதிசயமே (அந்தரங்கம் நானறிவேன்)



( சம்வாதம் )

என்ன-அந்த அதிசயமே சொல்லவொண்ணா ரஹசியமே (2)
அதிசயம் ஒன்றுமில்லை சாதனையும் ரஹஸ்யமில்லை
யோகம்-அதி..சயமுமில்லைச் சொல்லவொண்ணா ரஹஸ்யமில்லை
யோக-வழி நான்-அறிந்தேன் கண்டதனைத் தான்-உரைப்பேன் 
கண்ட-வழி நான் உரைப்பேன் சொன்னபடி நீ-புரிவாய்
யோகம்-அதி..சயமுமில்லைச் சொல்லவொண்ணா ரஹஸ்யமில்லை
(MUSIC)
தேடி-நல்ல மூலை-சென்று மூடிக்-கொண்ட கண்கள்
மறு நாள்-வரையில் விழிப்பதில்லை போம்மா-அது தூங்கல்
தேடி-நல்ல மூலை-சென்று மூடிக்-கொண்ட கண்கள்
மறு நாள்-வரையில் விழிப்பதில்லை ஆஹா-நல்லத் தூங்கல்
உண்மைதனைக் அறிந்திருக்கீர் த்யானம் யோகத்-தூங்கல்
உண்மை-நன்றே கூறிவிட்டீர் த்யானம் யோகத் தூங்கல்
எப்போதும் யோகத்திலே த்யானம்-விழிப்புத் தூங்கல்
உண்மையல்லவா உண்மையாகவா
நன்மையல்லவா இன்னும் சொல்லவா
என்ன-அந்த அதிசயமே சொல்ல-வொண்ணா ரஹசியமே
(MUSIC)
தாமரை-உன் தலை-முளைக்கும் என்று-சிலர் கூறி
என்னை-மூடனென்று ஆக்கிவிட்டார் உன்போல்-கதை கூறி
(2)
புரிந்தீரே கேலிகளைப் புரிந்தவரை போதும்
புரிந்தீர்-பல் சோதனைகள் புரிந்தவரை போதும்
இனியேனும் சாதனையைப் பூண்டிடவே பாரும்
உண்மையல்லவா உண்மையாகவா
நன்மையல்லவா இன்னும் சொல்ல வா
என்ன-அந்த அதிசயமே சொல்ல-வொண்ணா ரஹசியமே
*யோகம்-ஒரு அதிரசமே *உண்ண - உண்ண அதில் ரசமே ..


*தாமரை-உன் தலை-முளைக்கும்=யோக முதிர்ச்சியில் சஹஸ்ராரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை எழுதல்.

* யோகம் ஒரு அதி ரசமே = யோகம் உன்னதமான ரசத்தைக் காட்டக் கூடியது. அதுவே ‘ஒன்று’ என்னும்படியான, எதிலும் ரசமாய் விளங்கும் பரப்ரம்மம் என்றே விளங்குகிறது.இதைத் தான் விஷ்ணு  ஸஹஸ்ரநாமம் இப்படிக் கூறுகிறது

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய புருஷ சாக்ஷி ஷேத்ரக்ஜ்ஞோ க்ஷர ஏவ ச:

எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
கொல்லுகின்ற படியிலாத இணையுமிலாப் புருடனே
இடமறிந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ

*உண்ண =உள் +
உள்’ளுதல்’ = மீண்டும் மீண்டும் நினைத்தல் , நன்கு மதித்தல்
ந=திருவடி (See below)
அதன்படி உண்ண-உண்ண என்பது  இறைவனின் திருவடியை யோக சாதனை மூலம் இடைவிடாது  த்யானம் புரிவது என்று பொருள்படும். அப்படி உண்ண-உண்ண (உள்ந-உள்ந ) இறை ரசமே , எழும் நிசமே.. இது நிசமே..!
பஞ்சாக்ஷர மஹா மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் த்யான மெய்ப் பொருளாகும்.
ந=திருவடி,ம=திருஉந்தி,சி=திருடத்தோள்கள்,வா=திருமுகம்,ய=திருமுடி




Thursday, August 18, 2016

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)


அறியாமை - அறிவு சம்வாதம்


அத்தனையும் நானறிவேன் என்பதல்ல-பே..ரறிவு
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை
சாத்திரத்தை நான்-படித்தேன் கரைத்ததைக் குடித்துவிட்டேன்
சாத்திரத்தை நான்-படித்தேன் நானறியா நூல்கள்-இல்லை
கண்டபடி நான்-படித்தேன் பண்டிதனைப் போல-நன்றாய் (2)
அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே
(MUSIC)
பாரில்-கண்ட நூல்களிலே நீயும்--கற்ற கல்வி
தனில் ஒன்றும்-இல்லை மண்ணும்-இல்லை ஐயோ அது தோல்வி   
(2)
அறிந்து-விட்டேன் யார்-புகழும் தேவை-இல்லை போங்கள் (2)
என்-மேல்-பொ..றாமையினால் கூறுகிறீர்-நீங்கள்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா 
அத்தனையும் நானறிவேன் என்பதல்ல பேரறிவு
(MUSIC)
உண்மை-எது பொய்மை-எது நன்மை-தீமை யாது
என அறியாத நிலைமையன்றோ ஐயா-அறியாமை
வாலறிவன் தாள்-பணிந்து நல்..லறிவைத் தேடி
தன்னைத் தான்-உணர்ந்து கரைந்து-செல்ல வேணும் உந்தன்-ஆவி
அறிவேனே நான்-எதையும் அறிந்த-வரை போதும் (2)
உடனே போய் பைத்தியமே வைத்தியரைப் பாரும்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை

அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே

______________

Wednesday, May 11, 2016

1.48 to 1.51 நல்லது ரிதம்பரமே (அந்தரங்கம் நானறிவேன் )




நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே (2)
சத்தியத்தைக் கூறிடுமே சாதனையும் முடிவுறுமே
சத்தியத்தைக் கூறிடுமே சா..தனை முடிவுறுமே
முக்தி-தரும் வாலறிவே வந்துன்-நிஜம் தெரிந்திடுமே
நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே 
(MUSIC)
ஊடி-உன்னைத் துளைப்பதில்லை தாமசத்தின் சோம்பல் 
மனமான-மண்ணில் முளைப்பதில்லை எண்ணம் ஆகும்-சாம்பல் 
(2)
ரிதம்பரத்தில் வேறெதற்கும் இடமுமில்லை போங்கள் (2) 
கணந்தோறும் ஆனந்தத்தில் திளைத்திடலாம் நீங்கள் 
பின் சொல்லவோ இன்றே அல்லவோ 
என்ன சொல்லவோ ஒன்றேயல்லவோ 
நல்லது ரிதம்பரமே பொல்லது-விடும் கணமே 
(MUSIC)
இக-பரத்தில் தொடர்ந்திருக்கும் பந்த-பவம் போக 
அந்த ரிதம்பரத்தில் வினைமுளைப்பும் இல்லை-அவன் சாக 
(2)
புரியும்-உன் சாதனைகள் இதுவரையில் போதும் (2)
அலைமோதும் ஆனந்தத்தின் சாகரமே யாவும் 
பின் சொல்லவோ இன்றே அல்லவோ 
என்ன சொல்லவோ ஒன்றேயல்லவோ 
நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே (2)




1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)





நிர்விதர்க்க சமாதி
பெயர், பொருளின் ஞானம் (ஊகத்தின் அன்றி தர்க்கத்தின் பாற்பட்டதான) நினைவுப் பதிவின் துணை இல்லாமல் பொருள் விளக்கம் தோன்றுகின்ற சமாதி நிலையே நிர்விதர்க்க சமாதி. (தர்க்கம் = logic ).
__________

நிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே
(1+SM+1)
சொல்விளக்கம் ஏதுமின்றி மெய்-விளக்க..மாகும்-தம்பி (2) 

ஊகம்-தர்க்கம் போகுதலே நிர்வி..தர்க்கமாகும் தம்பி (2)

நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை
(MUSIC)
தேடிச்சென்ற பொருளைக்-கண்டு மூடிக்-கொண்ட கண்கள் 
ஒரு கணப்பொழுதும் திறப்பதில்லை த்யானம் விட்டுத் தாங்கள்
(2)
இதைத்தானே கூறுகிறீர் திரும்பத்-திரும்பத் தாங்கள் (2) 
தினம்தோறும் சோதனை-போல் எழுகிறதே சோம்பல்
இன்னும்-த்யானமா நன்மையல்லவா
நிர்விதர்க்கமா இன்னும் தர்க்கமா
நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை
(MUSIC)
தாமரையின் இதழ்-விரிந்து உன்..னெதிரில்-தோன்றி
உண்மை-தானெழுந்து விளங்கிவிடும் கேளாய்-இதைத் தம்பி
(2)
புரியாமல் சாதனைகள் புரிகிறேனெப்..போதும்
புரியும்-என் சாதனைகள் எதுவரையில் போகும்
அறியாமை எப்படி-என் த்யானத்திலே போகும்
இன்னும் த்யானமா நன்மையல்லவா
நிர்விதர்க்கமா இன்னும் தர்க்கமா
நிர்விதர்க்கம் என்பதண்ணே என்னவென்று சொல்லுங்கண்ணே
நிர்விதர்க்கம் மேலுமில்லை மற்றவைகள் தேவையில்லை

ஆ ஆ ..