Tuesday, August 16, 2011

சமாதி பாதம் சூத்ரம் 1 - 11


ENGLISH


1.சமாதி பாதம் : மனது பூரண அமைதிப்படும் நிலை  சமாதி எனப்படும். அந்த பூரண அமைதி நிலையை நேராக,உணர்வு பூர்வமாக,சரியாக உண்மையைக் காணும் அனுபவ நிலை என்று சொல்லலாம். 51 சூத்திரங்கள் அடங்கிய இந்த பாகத்தில் , யோகத்தைப் பற்றியும்,சமாதி நிலையைப் பற்றியும் அந்த நிலையை எட்டும் முறையைப் பற்றியும் பதஞ்சலி முனிவர் விளக்குகிறார்.

1. அத யோகானு சாஸனம் || 

இதற்கு யோகப் பயிற்சிக்கு துணை செய்கின்ற போதனைகள் என்று பொருள்

தத்துவம் அன்றிது சமத்துவ மாகநின்று
பத்தரும் சித்தரும் ஒருமுக மாகச்சென்று
சித்தமும் பதறாமல் எப்படிச் செய்வதென்று 
சுத்தமாய் பிழையற  விளக்குவேன் யோகமின்று
atha yoga anushasanam ||1||
अथ योगानुशासनम् ॥१॥
Yoga in the here and now: an introduction to the study and practice of yoga ||1||

atha (अथ, atha) = (conj.) and so, now (often used to introduce explanations)
yoga (योग, yoga) = (iic. / nom. sg. m.) yoga, unity, oneness, harmony with yourself
anushasanam (अनुशासनम्, anuśāsanam) = (nom. sg. n./acc. sg. n. from anushasana (अनुशासन, anuśāsana)) introduction to the experience; explanation; interpretation
-------------------------------------------------------------------------------------------------------

2. யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத:

அனைத்து சூத்திரங்களிலும் முக்கியமான சூத்ரம் என்றே இதை நாம் கருதிக்கொள்ளலாம்.யோகம் என்பது என்ன என்பதை  இந்த ஒரு சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் கூறுகிறார்
--------

பதஞ்சலியார் அளித்ததிந்த நூற்று தொண்ணூற்றாறு
அதன்தலையாய் நிற்குமிதன் சாரமதைத் தேறு
வதன்பயனாய் கூடும்யோகப் பாத்திரமாய் மாறு 
எமன்செயலால் வாடுமந்த சாவுமில்லை பாரு ..! 

யோகம் என்பது யாது 
மனதை ஒருமுகப்படுத்தி, மன அலைகளையும் எண்ணச் சுழல்களையும்   ஒரு நிலைக்குக் கொண்டு வருவதே யோகம் ஆகும்
__________
கணந்தொறும்  அலையென எழும்பிடும்  எண்ணம்
மனத்தினை அலைந்திடாச் செய்திடும் வண்ணம்
நினைப்பினில்  குலைந்திடா கண்டிடும் மின்னும்   
குணத்துரம்     அளித்திடும் யோகமிடு மன்னம்..!
____________

முன்னர்இறைந்திடும் அலையெனப்பெரிதாய் 
எண்ணம்திரண்டிடும் எழுச்சியாக 
பின்னர்மறைந்திடும் கலைதனைஎளிதாய்ப் 
பெற்றுச்சுருண்டிடும் வீழ்ச்சியாக
மாந்தர்விழைந்திடும் புலன்தனைக்கடிதாய்ப்
பற்றியேஉழன்றிடும் சுழற்ச்சியாக 
வந்தோர்இடத்தினில் இருந்திடச்செய்யும் 
யோகம்மனத்தினை சாட்சியாக..!
____________
இடர்ப்படும் மனத்திடை எழுந்துரும் சுழல் அலை 
தொடர்ந்திடும் வினைத்தொகை வளர்தலும் இலாமலே 
அடக்கலும் அடங்கலும் இலாதுறும் பரன்நிலை 
விழைதலின் அளிக்குமிந்த   யோகமென்ற உயர்கலை..!
____________
இந்த சூத்திரத்தில் கூறப்பட்ட சித்தம் என்பதும் மனம் என்பதும் வேறு வேறு. சித்தம் என்பதைத் தமிழில் சிந்தை என்று கொள்ளலாம். ஆனால் மனம் என்றே பெரும்பாலும் நாம் உபயோகப் படுத்துகிறோம். எந்த சூழலில் அதை உபயோகிக்கிறோமோ அதைப் பொறுத்து அதை மமாகவும் சித்தமாகவும் பொருள் கொள்கிறோம்.
மனத்திற்கும் சித்தத்திற்கு உள்ள நுண்ணிய வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேதாந்தத்தில் கூறப்படும் அந்தக்கரணம் அதாவது உள் உறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.
அந்தக்கரணம் என்பது நான்கு பகுதிகளைக் கொண்டது. அவையாவன 
மனஸ் என்று சமஸ்க்ரிதத்தில் கூறப்படும் மனம்
புத்தி அதாவது அறிவாற்றல்
அஹம்காரம் (ஆணவம் மட்டும் அல்ல) , நம் உடலை ஆத்மாவாக நினைக்கும் அறியாமை தான் அஹங்காரம் எனப்படுகிறது 
சித்தம் அதாவது சிந்தை.
இப்போது அந்தகரணத்தின் செயல்பாட்டை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் காண்போம். அப்போது மனதுக்கும் சித்தத்திற்கு உள்ள வேறுபாடு புரியும்.
மனம் என்பது, தான் பற்றிய எதையும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது. அதற்கு அறிவாற்றல் கிடையாது.உதாரணமாக ஒரு பேனாவை எடுத்துக்கொள்வோம். பேனாவைக் கண்டதும் மனம் ,அதை பிரதிபலிக்கிறது. இப்போது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து அதைப் பேனா என்று அடையாளம் காட்டுகிறது.
அதன் பிறகு அஹங்காரம் அதை எனது பேனா என்கிறது.
இது வரையில் ஒரு பிரச்சனையும் இல்லை. சித்தத்தில் தான் பிரச்சனையின் ஆரம்பம்.
சித்தம் என்ன செய்கிறது, அந்த பேனா எனக்கு மிகவும் பிடித்தது. இதற்கு முன் நான் வைத்திருந்த பேனா இன்னாருக்கு இரவல் கொடுத்த பின்னால் திருப்பி தரப்படவில்லை. எனவே இதை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். என் உயிர் போல இதைப் பாது காத்து வருகிறேன்.
இப்படியாக சித்தத்தில், தனது,தான் என்று உணர்ச்சி பூர்வமான ஈடுபாடு ஏற்படுகிறது.
இப்படி ஏற்படுகிற ஈடுபாடு அதாவது ATTACHMENT தான் வ்ருத்தி எனப்படுகிறது.
இந்த வ்ருத்தியைத் தான் நாம் ஆசை,மன அலை, எண்ணச் சுழல் என்றும் குறிப்பிடுகிறோம்.
எனவே நாம் உபயோகப்படுத்தும் சூழலைப் பொறுத்து மனம் என்று சொன்னாலும் சித்தத்தைக் குறிப்பிடுவதாக நாம் கொள்ளவேண்டும்.
இப்போது விருத்திக்கு வருவோம். இப்படி சித்தத்தில் உணர்ச்சியைத் தூண்டும் விதமான தாக்கங்கள் தான் வ்ருத்தி எனப்படும். 
வ்ருத்தியை எண்ண அலை என்பதை விட எண்ணச் சுழல் என்றே நாம் கொள்ளலாம். ஏனென்றால் விருத்திகள் சுழல் போன்றே நம்மைப் பற்றி உள்ளே இழுக்கும் தன்மையது. அலை என்ற ஒப்பீடு , ஓயாமல் வந்து செல்லும் தன்மையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.எனவே வ்ருத்திகள் என்பவை ஓயாமல் வந்து சென்று கொண்டும் , சுழல் போல நம்மைத் தளைப் படுத்திக்கொண்டும் இருக்கும் தன்மையவை. 
வரையறையற்ற உணர்வினை பற்றுதல்களால் ஒரு வரையறைக்குட்படுத்துவதைத் தடுப்பதே வ்ருத்தி நிரோதம் என்று பதஞ்சலி யோகம் சொல்கிறது.  
 சுலபமான புரிதலுக்கு விருத்திகளை ஆசைகள் அல்லது பற்றுதல்கள் என்று மனதில் உருவகப் படுத்திக் கொள்ளலாம்.ஆசைகள் ஏற்படுத்தும் இன்ப துன்பங்களும் விருத்திகள் தான்.
இந்த விருத்திகள் உதயமாவதைத் தடுப்பதே யோகம் என்பதாகும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.
பற்றுகளைத் துறப்பது எங்கனம் என்பதற்கு பலவாறான வழி முறைகள் பெரியோர்களால் கொடுக்கப் பட்டுள்ளது.
அதில் எனக்கு மிகவும் பிடித்தது "பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்கு" என்று திருவள்ளுவர் சொல்கிறார்.
இதையே தான் சங்கரர் சொல்கிறார்,ராமகிருஷ்ணர் சொல்கிறார்,ரமண  மக ரிஷி  சொல்கிறார். 
பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்.
இதைப் பற்றி கலியுக இறை அவதாரங்களில் ஒன்றாகப்  போற்றப்படும் மஹா பெரியவா என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்படும் காஞ்சி மாமுனிவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இதற்கான ஒலிப்பதிவு இந்த விடீயோவின் discription ல் கொடுக்கப் பட்டுள்ளது. தவறாமல் கேட்கவும். யோகத்தின் செயல் முறை விளக்கம் போல் விளங்குமாறு தன்னையறிந்த ஞானிகளாலேயே கொடுக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு விளக்கம் தான் இது.
துக்கத்தைப் போக்கும் வழி என்று தெய்வத்தின் குரலில் அவர் கூறியது தான் அது. துக்கம் என்பது நமக்கு அடிக்கடி தோன்றும் வ்ருத்திகளில் ஒன்று. துக்கம் மட்டுமல்ல இன்பத்தையும் எப்படிக் கையாள வேண்டும் என்றும் அதில் தெரிய வரும்.
இதே போல் சித்த வ்ருத்தியாகிய அழுக்கை எப்படிப் போக்குவது என்றும் தெய்வத்தின் குரல் சொல்கிறது.
எல்லையும் தன்மையும் கடந்த தூய உணர்வு தான் (Pure Conciousness ) ஆனந்தம் என்று சொல்லப்படுகிறது. அதுவே தான் ஞானம் என்றும் கூறப்படுகிறது. ஆனந்தத்தை அடைவது எப்படி என்றும் மஹா பெரியவர் கூறுவதையும் கேட்பது பயன் தரும். 

படிக்க ( For further study) : 

கோபம் என்பது சித்த வ்ருத்திகளில் சாதனையின் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒரு வ்ருத்தியாகும்.
காஞ்சி மஹான் தெய்வத்தின் குரல் முதல் பகுதியில் கோபம் என்ற தலைப்பில் கூறியுள்ளது , சாதகனுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகும். கீழ்க் கண்ட லிங்க்கைத் தொடர்ந்து அதைப் படித்து அறிந்து கொள்ளவும்.
https://www.kamakoti.org/tamil/part1kural58.htm

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

https://www.kamakoti.org/tamil/part1kural56.htm

குற்றமும் குணமும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி): https://www.kamakoti.org/tamil/part1kural57.htm

உபதேச ஸாரம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)  இடம் , காலம் ஆகிய இரண்டும் வ்ருத்திகளுக்கு முக்கிய காரணங்களாகின்றதையும் அவற்றைக் கடப்பது பற்றியும் இதில் காணலாம்.
https://www.kamakoti.org/tamil/Kural50N1.htm
 
 

योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥
yogaś-citta-vṛtti-nirodhaḥ ||2||
When you are in a state of yoga, all misconceptions (vrittis) that can exist in the mutable aspect of human beings (chitta) disappear. ||2||

yogah (योगः, yogaḥ) = (nom. sg. m. from yoga (योग, yoga)) yoga
chitta (चित्त, citta) = (iic.) all that is mutable in human beings; thoughts
vritti (वृत्ति, vṛtti) = (iic.) thought-wave; mental modification; mental whirlpool; a ripple in the chitta. A vritti alters perception like a misconception, or as waves on the surface of a pond obscure or distort our view of the bottom.
nirodhah (निरोधः, nirodhaḥ) = (nom. sg. m. from nirodha (निरोध, nirodha)) to find tranquility; to control
-------------------------------------------------------------------------------------------------------

3. ததா த்ரஷ்டு :
ஸ்வரூபே வஸ்தானாம் ||

யோகத்தின் பயன்
யோகம் மூலம் மனத்தை ஒருமுகப் படுத்தும்போது சொந்த இயல்புடன் சுதந்திரமாக விளங்கலாம் 

தெளிந்தநீரில் துல்லியக் காட்சியாகும் பிம்பமாய் 
கனிந்தநெஞ்சின் மென்மையில் மலர்ச்சியாகும் பாசமாய் 
விளங்குமந்த நுண்ணிய சாட்சியாகும் ஆத்துமா 
துலங்குமிடம் யோகியர் தூய்மையான நெஞ்சமாம்..!
 
ஒரு முகப்பட்ட மனதில் தோன்றும் அமைதியாகப்பட்டது இறைவன் நமக்கு வேண்டியதை அளிப்பான் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. அதாவது சரணாகதி என்று சொல்லப் படும் உயரிய நிலையை அளிக்கிறது.
அதே போல் இறைவன் பேரில் நாம் வைக்கும் நம்பிக்கை மன அமைதியை அளிக்கிறது.
பற்றறுத்தலின் உயரிய நிலை நம் உண்மை நிலையை நமக்குக் காட்டும். அப்போது கட்டுக்களிலிருந்து விடுபட்டு சுதந்திரத்துடன் விளங்கலாம்.

மனது எப்போது ஒருமுகப்படும்.  அதாவது பூரண அமைதி (perfect calmness) அல்லது  சித்த சுத்தி எப்போது ஏற்படுகிறது ? 
நமக்கு நமக்கு என்ற உணர்வைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்ட பிறகே. பிறர்க்குச் செய்யும் சேவை மூலம் உண்டாகும் ஆனந்தத்திலிருந்து  நமக்கு என்னும் சுயநல உணர்வை சிறிது சிறிதாகக் குறைத்து சித்த சுத்தியைப் பரிபூரணமாக  அடையமுடியும். சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் என காஞ்சி மாமுனிவர் தெய்வத்தின் குரலில் சொல்லியுள்ளது description ல் ஒலி வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தவறாமல் கேட்கவும்.

   Love All Serve All
Help Evert Hurt Never

என்னும் இரண்டு மஹா வாக்யங்களைச் சிறந்த வழிகாட்டுதலாக ஸ்ரீ சத்ய சாய் பாபா கூறியுள்ளார்.
இந்த வழிகாட்டுதல்களை வாழ்க்கையில் மேற்கொள்ள ஆரம்பித்தால் சித்த சுத்தி ஏற்பட்டு சித்தம் வ்ருத்திகள் இல்லாமல் , நிர்மலமாய் ஆகி ஆன்ம உணர்வில்  திளைக்க வழி செய்கிறது.

இந்த வழிகாட்டுதல்கள் சாதன பாதத்தில்  சூத்திரம் 29ல்   சாதகன் மேற்கொள்ள வேண்டுவனவாக கூறப்படும் யமம் , முதலான யோக சாதனைகளுக்கு அடிப்படையாக இருப்பதால் ,எளிதில் புரியக் கூடிய இந்த சாதனை ஒரு சிறந்த வரப்ரசாதமாகவே மக்கட்குலத்திற்குத் திகழ்கிறது. "மானவ சேவையே மாதவ சேவை".


तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम् ॥३॥
tadā draṣṭuḥ svarūpe-'vasthānam ||3||
For finding our true self (drashtu) entails insight into our own nature. ||3||

tada (तदा, tadā) = (adv.) then
drashtuh (द्रष्टुः, draṣṭuḥ) = (g. sg. m./abl. sg. m.) the true self
sva (स्व, sva) = (icc.) their own
rupa (रूप, rūpa) = (loc. sg. n./acc. du. n./nom. du. n.) form
svarupe (स्वरूपे, svarūpe) = (loc. sg. n. from svarupa (स्वरूप, svarūpa)) in (its) own form; true essence; true being; true nature
avasthanam (अवस्थानम्, avasthānam) = (nom. sg. n./acc. sg. n. from avasthana (अवस्थान, avasthāna)) residence; quiet place; place of business; place to stay; rest in; recognize.

-------------------------------------------------------------------------------------------------------

4. வ்ருத்தி சாருப்ய மிதரத்ர ||

மனத்தின் மருட்சி
நாம் மன அலைகளுக்குள் சிக்கியிருக்கும்போது அந்த மன அலைகளுக்கு ஏற்பவே செயல் படுகின்றோம். நம் உண்மையான தன்மையிலிருந்து விலகி விடுகின்றோம்

சுடர்தனின் கவர்ச்சியில் கொளுந்துகின்ற விட்டிலாய் 
இடர்தரும் உணர்ச்சியில் அழுந்துகின்ற தாதலால் 
படர்ந்திடும் மருட்சியில் வருந்துகின்ற மனதினால் 
அடர்ந்திருக்கும் காட்சிதன்னில் ஆன்மஉண்மை இல்லையே..!

அதாவது வ்ருத்திகளில் சிக்கிய மனம் அறியாமையில் உழல்கிறது. மேலும் பலப் பல தவறான கண்ணோட்டங்களை பெறுகிறது. எடுத்துக் காட்டாக மனம் பற்றிய ஆசையின் தாக்கம் , நம்மை அந்த ஆசையை பூர்த்தி செய்ய சரியில்லாத வழிகளையும் நியாயப் படுத்தச் செய்கிறது. 
நம்முடைய அஹங்காரம் நம்மை கற்பனை செய்யமுடியாத ஆன்மீக முன்னேற்ற உயரத்திற்கு இட்டுச் செல்லும் தன்மையை உடையது. அதே சமயத்தில் , அறியாமையால் அதள பாதாளத்தில் தள்ளிவிடும் தன்மையும் உடையது.  
நாம் எப்படிப் பட்ட வ்ருத்திகளை பாதிக்க அனுமதிக் கூடாது , அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் படி நடக்க வேண்டும். இதன் முகமாகத் தான் வேதாந்தத்தின் மஹா வாக்கியங்களில் ஒன்றான "அஹம் ப்ரம்மாஸ்மி" நமக்கு வழங்கப்பட்டது. நான் பிரம்ம ஸ்வரூபம் அதாவது ஆத்ம ஸ்வரூபம், உடல் நானல்ல என்று நமக்கு நாமே கணந்தோறும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம்.

वृत्ति सारूप्यमितरत्र ॥४॥
vṛtti sārūpyam-itaratra ||4||
Lacking that, misconceptions (vritti) skew our perceptions. ||4||

vritti (वृत्ति, vṛtti) = (nom. sg. f.) waves; changes; thought waves; lack of clarity
sa (सा, sā) = (icc.) similar
rupyam (रूप्यम्, rūpyam) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n.- rupya (रूप्य, rūpya)) form
sarupyam (सारूप्यम्, sārūpyam) = (acc. sg. m. from sarupya (सारूप्य, sārūpya)) similar form, as opposed to proprietary form of svaruupa (see above). In other words, we identify with something that is merely similar to our true nature, thus engendering a skewed perception.
itara (इतर, itara) = different, otherwise
itaratra (इतरत्र, itaratra) = (adv.) in other states, otherwise

Thanks to :
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/vritti-sarupyam-itaratra-4/

-------------------------------------------------------------------------------------------------------

5. வ்ருத்தய பஞ்சதய்ய :
க்லிஷ்டாக்லிஷ்டா: ||

மன அலைகள் ஐந்து வகை  
மன அலைகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் துன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன. இன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன.

ஐந்துமைந்து மாயிருந் தலைந்திருக்கு மெண்ணமே
வந்துவந்து இன்பதுன்பம் தந்திருக்கும் திண்ணமே
துறந்துவந்து கொள்ளும்தள்ளும் தன்மைகொண்டு முன்னமே 
அறிந்துஉய்யும் திறனளிக்கும் யோகம் அமுதக்கிண்ணமே  ..! 

மேலே கூறியுள்ள வ்ருத்திகளில் பல நாமே ஏற்படுத்திக் கொள்வது.
எடுத்துக்காட்டாக சிலருக்குத் துன்பமாகத் தோன்றும் ஒரே பொருள் மற்ற சிலருக்கு இன்பமாகத் தெரிகிறது. இருக்கும் பொருளோ அதன் தன்மையோ உண்மையில் ஒன்று தான். எடுத்துக்காட்டாக பாகற்காய் கசப்பே சிலருக்குச் சுவையாகவும் , சிலருக்கு பிடித்தமில்லாமலும் தோன்றுகிறது.
அதாவது வ்ருத்திகள் நம்மை பாதிப்பதில்லை நாம் தான் அவைகளால் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
விருத்திகள் நம்மை யாரென்று அடையாளம் காட்டுவதில்லை அவை நாம், நம்மை யாரென்று எண்ணுகிறோம் என்பதைத் தான் காட்டுகிறது. அதைத் தான் மாயை என்கிறார்கள்.
இந்த உண்மையை நாம் உணர மேற்கொள்ளும் பயிற்சியே யோகம் ஆகும்.

இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க

वृत्तयः पञ्चतय्यः क्लिष्टाक्लिष्टाः ॥५॥
vṛttayaḥ pañcatayyaḥ kliṣṭākliṣṭāḥ ||5||
There are five types of misconceptions (vrittis), some of which are more agreeable than others: ||5||

vrittayah (वृत्तयः, vṛttayaḥ) = (nom. pl. f. from vritti (वृत्ति, vṛtti)) waves; lack of clarity; thought waves; misconceptions
panchatayyah (पञ्चतय्यः, pañcatayyaḥ) = (nom. pl. f. from panchatayya (पञ्चतय्य, pañcatayya)) five-fold, of a five-fold nature
klishta (क्लिष्ट, kliṣṭa) = (iic.) burdensome, painful, disagreeable, unpleasant
aklishtah (अक्लिष्टः, akliṣṭaḥ) = (nom. pl. m./acc. pl. f./nom. pl. f. from aklishta (अक्लिष्ट, akliṣṭa)) carefree, unencumbered, painless, agreeable, pleasant

-------------------------------------------------------------------------------------------------------
6. ப்ரமாண - விபர்யாய - விகல்ப 
நித்ரா - சம்ருதய ||

மன அலைகள் ஐந்து
அந்த ஐந்து வகையாவது : சரியாகப் புரிந்து கொள்வது , தவறாகப் புரிந்து கொள்வது , பொருளற்ற கற்பனை, நினைவு(Memory) , தூக்கம் 

கடலின்அலையைப் போன்றது மனதிலைகள்  ஐந்தது 
சிலதுநன்று அறிவது சிலதுதவறாய்ப் புரிவது 
சிலதுநினைவில் நிற்பது கற்பனைவெற் றுருவது
சிலதுஉலகை மறக்குமந்த  உறக்கத்திலும் தொடர்வது..!

முந்தைய சூத்திரத்தில் கூறப்பட்ட ஐந்து வ்ருத்திகள் யாவை என்று இந்த சூத்திரத்தில் கூறப்படுகின்றன.
இந்த ஐந்து வித வ்ருத்திகளைப் பற்றி அடுத்த சூத்திரத்திலிருந்து ஒவ்வொன்றாக சொல்லுகிறார் பதஞ்சலி முனிவர்.
அந்தந்த ஸூத்திரங்களில் அவைகளை விளக்கமாகக் காண்போம்


प्रमाण विपर्यय विकल्प निद्रा स्मृतयः ॥६॥
pramāṇa viparyaya vikalpa nidrā smṛtayaḥ ||6||
insight, error, imaginings, deep sleep, and recollections.

pramana (प्रमाण, pramāṇa) = (iic.) insight; accurate perception; accurate knowledge
viparyaya (विपर्यय, viparyaya) = (iic.) error; false perception; false knowledge
vikalpa (विकल्प, vikalpa) = (iic.) imagining; illusion; mental construct; the illusion that a semantic construct such as “praise” actually exists
nidra (निद्रा, nidrā) = (icc. / nom. pl. f./acc. pl. f.) sleep; deep sleep
smriti (स्मृति, smṛti) = (icc.) recollections; memory
-------------------------------------------------------------------------------------------------------

7. பிரத்யக்ஷானுமானாகமா:
ப்ரமாணானி ||

 முந்தைய சூத்திரத்தில் கூறிய ஐந்து வித மன அலைகளை பற்றி ஒவ்வொன்றாக சொல்லுகிறார் பதஞ்சலி முனிவர்.
அதில் முதலாவதாக இந்த சூத்திரத்தில் கூறப்படுவது ,

சரியான அறிவு
சரியான அறிவென்பது கீழ்கண்ட மூன்றின் மூலம் பெறப்படும்

நாமே நேராக உணர்ந்து அறிவது , மற்றொன்றன் மூலமாக ஆராய்ந்து அறிவது , கற்றோர் மூலமோ சாத்திரங்கள் மூலமோ அறிவது

எடுத்துக்கொள்ளும் அறிவிலொன்று  உனக்குநீயே அறிவது 
கடினமான தென்றுதோன்றில் அனுமானத்தை அணுகிடு  
படிப்பதாக மண்ணில்நாடு புனிதமான நூலது 
புலப்படாத கேள்விக்கெல்லாம் பதிலைக்கூறும் பாரது ..!

சரியான அறிவு அல்லது சரியாகப் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக, தினமும் சில நிமிடங்கள் செய்யும் இறைவனின் நாம ஜபம் மனம் அமைதி பெற உதவும் என்பது. இதை நாமே நேராக அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளலாம்.சமாதி நிலையில் ஏற்படும் ஆனந்த அனுபவத்திற்கு ஈடு இணை இல்லை. இதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் வரை, சாத்திரங்களில் சொன்னதை நம்பியோ, தன்னை அறிந்த ஞானிகளின் கூற்றை நம்பியோ முன்னேறலாம்.
இங்கு சாத்திரங்களின் பிரமாணத்தை நன்கு புரிந்து கொள்ள பல சமயங்களில் ஒரு குருவின் வழிகாட்டுதலோ ,ஞானியின் துணையோ  நமக்குத் தேவைப்படும்.
நம் தேசத்தில் அவ்வப்போது தோன்றி நமக்கு வழிகாட்டும் அவதார புருஷர்களும்,ஞானியர்களும் காட்டும் பாதையைத் துணை கொள்ளும்போது நம் சாதனை எளிதாகிறது.


प्रत्यक्षानुमानागमाः प्रमाणानि ॥७॥
pratyakṣa-anumāna-āgamāḥ pramāṇāni ||7||
Insight arises from direct perception, conclusions, or learning that are based on reliable sources. ||7||

pratyaksha (प्रत्यक्षा, pratyakṣā) = that which is right in front of our eyes; that which is directly seen or perceived
anumana (अनुमान, anumāna) = that which comes from the intellect (manas); a conclusion that is reached
agamah (आगमः, āgamaḥ) = (nom. from agama (आगम, āgama)) legacy; learning from reliable sources; testimony; pronouncements by others; documentary knowledge
pramanani (प्रमाणानि, pramāṇāni) = (from pramana (प्रमाण, pramāṇa)) insight; accurate perception; accurate knowledge
-------------------------------------------------------------------------------------------------------

8.விபர்யயோ மித்யா 
ஞானமதத்ரூப பிரதிஷ்ட்டம் 

அறிவின்  திரிபு
உண்மைக்கும் போலிக்கும் வித்யாசம் தெரியாத போது அறிவில் மயக்கம் உண்டாகும் 


இருட்டில் கயிறை மருளுமறிவு பாம்புஎன்றே எண்ணுது
பெருத்தவயிற்றில் பசியினாலே விடமுமுணவாய்ச் செல்லுது
சுட்டெரிக்கும் வெய்யில்தன்னில் கானல்நீராய்த் தோன்றுது
கெட்டபுத்திதுரியனுக்கு தரையும்நீராய்த் தெரிந்தது..!
 
அறிவின் மயக்கத்தினால் ஏற்படும் புரிவின் திரிபுக்கு ஒரு நல்ல உதாரணம் கயிறைப் பாம்பாக நினைப்பதும்,கானல் நீரும் . 

பல சமயங்களில் இந்த வ்ருத்தி ( சரியான புரிதலில்லாமை) நம்மை மிகவும் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும் தன்மையை உடையது. உதாரணமாக, மது அருந்துவதால் உண்டாகும் போதை இன்பத்தையும்,துன்பத்தைப் போக்கும் தன்மையை உடையதாகவும் இருப்பது.
இது சரியான புரிதல் அல்ல என்பது மட்டுமல்லாமல் அந்த புரிதலினால் ஏற்படும் மிகப் பெரிய தீங்கிலிருந்து விடுபட நீண்ட காலம் ஆகும். 

இந்த இடத்தில் மாயை பற்றி காஞ்சி மஹானின் அருள்வாக்கு சிறந்த புரிதலைத் தரும்.
description ஜப் பார்க்கவும் 
 

विपर्ययो मिथ्याज्ञानमतद्रूप प्रतिष्ठम् ॥८॥
viparyayo mithyā-jñānam-atadrūpa pratiṣṭham ||8||
Error arises from knowledge that is based on a false mental construct. ||8||

viparyaya (विपर्यय, viparyaya) = (nom. sg. m.) error; false perception; false knowledge
mithya (मिथ्या, mithyā) = (nom. sg. f.) false; misleading
jnanam (ज्ञानम्, jñānam) = (acc. sg. n./nom. sg. n. from jnana (ज्ञान, jñāna)) knowledge; insight; idea; concept
a (अ, a) = not
tad (तद्, tad) = that; which; whose
rupa (रूप, rūpa) = form; nature
atadrupa (अतद्रूप, atadrūpa) = (iic.) different form
pratishtham (प्रतिष्ठम्, pratiṣṭham) = (acc. sg. m./acc. sg. n./nom. sg. n. from pratishtha (प्रतिष्ठा, pratiṣṭhā)) rooted, calming, compatible
-------------------------------------------------------------------------------------------------------

9.சப்தஞானானுபாதீ 
வஸ்துசூன்யோ விகல்ப: 

பொருளற்ற கற்பனை வெற்றுரை
அர்த்தமற்ற வார்த்தைகளாலான வெற்றுரையில் எந்த உண்மையும் இருப்பதில்லை. அவை மயக்கத்தையே தருகின்றன 

கவர்ந்திழுக்கும் தன்மையா யிருந்திருக்கு மாயினும் 
சுமந்துபெற்ற தாயைப்பிள்ளை மலடி என்றுரைப்பதும் 
உவந்துபேசும் ஒருவன்தன்னை ஊமைஎன் றிரைவதும்   
போன்றதாகும் அர்த்தமற்ற வார்த்தைகொண்ட வெற்றுரை 

 நாமாக சரியில்லாத கற்பனை செய்து கொள்வதும் அதன் மூலம் நாம் நம் நிலையை நியாயப் படுத்த முயலுவதையும் இது குறிக்கிறது. எடுத்துக் காட்டாக முற்காலத்தில் நடை முறையில் இருந்து வந்த மிருக பலி நர பலி ஆகியவைகள் பல காலமாக ஆன்மீக சம்மந்தப் பட்ட பூஜைகளாக நியாயப்படுத்தப் பட்டு வந்தது.
நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் நம்முடைய சரியில்லாத கற்பனையால் நம் நிலையை  வெற்றுரைகளால் செய்யும் நியாயப் படுத்துதல் உண்டல்லவா?
பற்றற்ற முறையில் புத்தியைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தை ஆயும்போது மட்டுமே அர்த்தமற்ற கற்பனையை  ந்யாயப்படுத்துதலிலிருந்து விடுபட முடியும்.


 

शब्दज्ञानानुपाती वस्तुशून्यो विकल्पः ॥९॥
śabda-jñāna-anupātī vastu-śūnyo vikalpaḥ ||9||
Imaginings are engendered by word knowledge without regard for what actually exists in the real world. ||9||

shabda (शब्द, śabda) = (iic.) word
jnana (ज्ञान, jñāna) = (iic.) knowledge
anupati (अनुपाती, anupātī) = (acc. sg. n./nom. sg. n.) consequent upon; real
vastu (वस्तु, vastu) = (acc. sg. n./nom. sg. n.) reality; object; thing; entity
shunya (शून्य, śūnya) = (nom. sg. m.) devoid; empty; unrelated;
vikalpah (विकल्पः, vikalpaḥ) = (nom. sg. m. from vikalpa (विकल्प, vikalpa)) imagining, illusion, semantic confusion; the illusion that a semantic construct actually exists
-------------------------------------------------------------------------------------------------------

10.அபாவ - பிரத்யயாலம்பனா 
வ்ருத்திர்நித்ரா 

தூக்கம் 
மனது எண்ண அலை இல்லையென்று உணரும் நிலை தூக்கமாகும்

இல்லைஇல்லை என்றுஒன்றைச் சொல்லுகின்ற போதிலே 
இல்லையென்ற அந்தஒன்றி ருந்திருத்தல் போலவே 
தொல்லையான எண்ணம்யாவும் ஓயும்தூக்கம் என்பது 
எண்ணுமெண்ண மில்லையென்று எண்ணுகின்ற எண்ணமே..!

சித்தத்தில் எண்ணங்களின் அதிர்வு இல்லாமல் இருக்கும் நிலையே தூக்கம் என்பது.
அளவான தூக்கம் தேவை.அளவுக்கு மீறிய தூக்கம் சோம்பலைத் தரும் என்பது நாம் அறிந்த ஒன்று. தூக்கம் என்ற வ்ருத்தியை தியானத்தினால் கடக்கிறார்கள் ஞானியர். விழித்துக் கொண்டே தூங்குவதே த்யானம். மனத்தின் வெளியுலகத் தூக்கமாகிய த்யானத்தில், ஆன்மாவில் நிலைக்கும் முயற்சியில், பெருத்த விழிப்புணர்வு தோன்றுகிறது. அது தூக்கத்தின் மேல் பன்மடங்கு புத்துணர்ச்சியை அழைக்கிறது என்பது ஞானியர் வாக்கு.


अभावप्रत्ययालम्बना तमोवृत्तिर्निद्र ॥१०॥
abhāva-pratyaya-ālambanā tamo-vṛttir-nidra ||10||
Deep sleep is the absence of all impressions resulting from opacity in that which is mutable in human beings (chitta). ||10||

abhava (अभाव, abhāva) = absence; non-presence; lack
pratyaya (प्रत्यय, pratyaya) = impressions; that which is in the mind; opacity of chitta, i.e. impressions in chitta via vrittis.
alambana (आलम्बन, ālambana) = support, basis, interrelationship, based on
tamo (तमो, tamo) = inertia. Tamas is one of the three gunas, i.e. the basic properties of matter.
vritti (वृत्ति, vṛtti) = lack of clarity; waves; thought waves
nidra (निद्रा, nidrā) = sleep; deep sleep

-------------------------------------------------------------------------------------------------------

11.அனுபூத விஷயாஸம்ப்ரமோஷ:
ஸ்ம்ருதி : ||

நினைவுப் பதிவு(Memory)
முன்பு வாழ்வில் அனுபவித்த விஷயம் திரும்பவும் மனதில் தோன்றுகின்ற அலையே நினைவு என்பதாகும். நினைவு மனதில் பல பதிவுகளை ஏற்படுத்துகின்றது. பின்னர் அந்த பதிவுகளே மேல் தளத்துக்கு வருகின்றன. 

கிணற்றிலூறும் நீரைவெள்ளம் கொள்வதில்லைபோலவே
மனத்திலூறும் ஆசையாவும் அழிந்துபோவதில்லையே
கணங்கள்தோறும் தோன்றுமெண்ணம் எளிதில்கரைவ தில்லையே
கனன்றெழும்பும் காற்றுபோல பின்னெழும்பும்மெல்லவே ..! 

நாம் ஏதோ ஒரு கால கட்டத்தில் அனுபவித்த விஷயங்கள் நினைவு கூறப்படுவது இதில் அடங்கும். தீயவைகளாகவும்,தளைப்படுத்துவதாக இருக்கும் நினைவுப் பதிவை அகற்ற வேண்டும். பூர்வ ஜென்ம வாசனை என்று கூறப்படுவதும் இந்த ரகத்தில் சேர்ந்தது தான்.    
 

 

अनुभूतविषयासंप्रमोषः स्मृतिः ॥११॥
anu-bhūta-viṣaya-asaṁpramoṣaḥ smṛtiḥ ||11||
Recollections are engendered by the past, insofar as the relevant experience has not been eclipsed. ||11||

anu (अनु, anu) = (prep/adv) from
bhuta (भूत, bhūta) = (iic.) that which has been experienced; the past
vishaya (विषय, viṣaya) = (iic.) entity; situation; experience
a (अ, a) = not
sam (सं, saṁ) = fully; completely
asam (असं, asaṁ) = (acc. sg. m. from asa (आस, āsa)) incomplete
pramoshah (प्रमोषः, pramoṣaḥ) = (m. from pramosha (प्रमोष, pramoṣa)) rob; remove; eliminate; obscure
smritih (स्मृतिः, smṛtiḥ) = (nom. sg. f. from smriti (स्मृति, smṛti)) memory; recollections
-------------------------------------------------------------------------------------------------------

இந்த 11 சூத்திரங்களில் பேசப்படுவதன் சாரம்  

சூத்திரம்   (1-3) -  யோகம் என்பது என்ன,அதன் பயன் என்ன என்பதைத் தருகிறது.இதில் சூத்திரம் 2 எல்லா யோக சூத்திரங்களிலும் தலையாயதாகக் கருதப்படுகிறது.இதை அடிக்கடி சிந்திப்பது நல்ல பலனைத் தரும்.

சூத்திரம்      (4) -  ஒருமுகப்படாத மனதின் தன்மை

சூத்திரம்      (5) -  மனதின் 5 நிலைகளாவன
 சரியாகப் புரிந்து கொள்வது ,
 தவறாகப் புரிந்து கொள்வது ,
 பொருளற்ற கற்பனை,
நினைவுப் பதிவு (Memory) , தூக்கம்

 

சூத்திரம் (6-11) - மேற்கூறிய ஐந்து நிலைகளைப் பற்றி சூத்திரம் 6லிருந்து 11வரை ஐந்து சூத்திரங்களில் விளக்கம் தரப்படுகிறது.


PREVIOUS                                                                                  NEXT

<<< முதல் பக்கம் >>>



No comments:

Post a Comment