Showing posts with label கால மகள் கைகொடுப்பாள். Show all posts
Showing posts with label கால மகள் கைகொடுப்பாள். Show all posts

Thursday, July 23, 2015

1.22. நோக்கப் பழம் தித்திக்குமா (கால மகள் கைகொடுப்பாள்)

 
 
ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத் 
ததோ ஸபி விசேஷ : ||
சாதனையின் தீவிரம்
சாதனையின் தீவிரத்திற்கேற்ப பயன் கிடைக்கிறது. ஆழ்ந்த தீவிரம் விரைந்தும் , மிதமான தீவரம் சிறிது தாமதித்தும் , குறைந்த தீவிரம் தாமதித்தும் பலன் தரும்.
___________________________________________________

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா

(2)
நோவது தான் நோன்பு என்று இல்லையா
அந்த நோவில்-தான் பலனிருக்கு இல்லையா

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா
(MUSIC)
சின்னச்-சின்ன குச்சிகள்-தான் பின்னப்-பின்ன கூடுகளாம்
ஆவதெல்லாம் முயற்சியிலே இருக்கு-அறியடா
(2)
ஒரு பொழுதும் விரதங்களும் யாகங்களும் பூஜைகளும்
மனம்-கழுவ இல்லை என்றால் உனக்கு ஏனடா
தம்பி பிறகு ஏனடா..தம்பி நினைத்துப் பாரடா
(SM)

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப்-பசி சென்றிடுமா என்னய்யா
(MUSIC)
ஆஆ .. + (SM)
கல்லுக்கு நீ தேனும் பாலும் மிகச் சொரிந்த போதும்
ஆயிரமாய் இறைவன் பேரை தினம்-உரைத்த போதும்
 (1+Short Music+1)
நெஞ்சுக்குள்ள பகையை வெறுப்பினிலே மதியை
உள்ளுக்குள்ளே வைப்பதனால் பலனும் ஏதடா
தம்பி பலனும் ஏதடா தம்பி முழுதும் வீணடா 
( Short Music )

நோக்கப் பழம் தித்திக்குமா சொல்லய்யா
நாம் பார்க்கப் பசி சென்றிடுமா என்னய்யா

ஆஆ ..
 
_____________