Showing posts with label Pathanjali Yogam Song. Show all posts
Showing posts with label Pathanjali Yogam Song. Show all posts

Wednesday, April 5, 2023

*** பதஞ்சலி யோக சூத்திரப் பாடல்கள் ***

 1. சமாதி பாதம்

1.1. ஏதோ என்று அலையும் மனது (அதோ அந்த பறவை போல) RECORDED

1.2. எண்ணங்களிலே இல்லை (செல்லக் கிளியே மெல்லப் பேசு) RECORDED

1.3. உலகத்தினுள்ளே(சின்னப் பயலே) RECORDED

1.4. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) RECORDED

1.5. எண்ணங்களின் கடலாகும் மனது(எண்ணிரண்டு பதினாறு வயது) RECORDED

1.6. சாதகரே சாதகரே (கோபியரே கோபியரே) RECORDED

1.7. சாதகரே தெளிந்த அறிவு (உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்) RECORDED

1.8. உண்மை அறிவுதானா (நேத்துப் பரிச்ச ரோஜா) RECORDED

1.9. அர்த்தங்களில்லா வெற்றுப் பேச்சு(செல்லக்கிளியே மெல்லப்பேசு) RECORDED

1.10. சத்தம் அடங்கும் உறக்கத்திலும்(எண்ணப் பறவை சிறகடித்து)  RECORDED

1.11. மனதில் வரும் (இரவு வரும் பகலும் வரும்)

1.12.  இதுதான் யோகமா(இதுதான் உலகமா) 

1.13. புரிந்திடவே வேண்டும்(இசைத் தமிழ் நீ செய்த)

1.14. ஸ்வாசத்தை நீ(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) RECORDED

1.15.கண்ணால்-காதால்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)  RECORDED

1.16. நீ வேறு அல்ல (காவேரி ஓரம்)

1.17. தூய்மையான அறிவு(அமைதியான நதியினிலே) 

1.18. உலகை மறக்கணும் மெதுவாக (உலகம் பிறந்தது எனக்காக)  RECORDED

1.19. சாதனை சாவில்(ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்)  RECORDED

1.20 சாதனை புரிவோரே(ஆசையே அலைபோலே) 

1.22.நோக்கப் பழம் தித்திக்குமா (கால மகள் கைகொடுப்பாள்) 

1.23 காலமின்றி (காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே) 

1.24. காலம் தனை(காலங்களில் அவள் வசந்தம்)   RECORDED

1.25.அனைத்தும் அறிந்த உணர்வே (நினைக்கத் தெரிந்த மனமே)  RECORDED

1.26. அந்த இறைவன் ( செல்லக்கிளியே )   RECORDED

1.27. ஓம் என்பதே ( செல்லக்கிளியே )   RECORDED

1.27 ஓம் ஓம் என நாம் கூறுவோம் (பூ மாலையில்) ** RECORDED

1.28. உரைப்போம் ஓம் ஓம் ஓம் (தரை மேல் பிறக்க வைத்தான்)**   RECORDED

1.29. ஓம் காரப் ப்ரணவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)** 

1.30. துள்ளும் மனதின் சீர்குலைவு (துள்ளித் திரிந்த பெண் ஒன்று)**   RECORDED

1.31.மனதில் அமைதி குறைகின்றது (மெழுகு வர்த்தி எரிகின்றது)**  RECORDED

1.32. ஒன்றே ஒன்று-கொண்டு(ஒன்றே குலம் என்று வாழுவோம்) 

1.32. ஆட்டமில்லா ஓர் மனதில் (ஆட்டுவித்தால் யாரொருவர்)** 

1.33. மனதில் பெரும் (இரவு வரும் பகலும் வரும் ) ** 

1.34. மூச்சுப் பயிற்சியில் நின்று(கேள்வி பிறந்தது அன்று) ** 

1.35. நிலைப்பதனை(நினைப்பதெல்லாம்) 

1.36. உள்ளதே ஒரு-ஜோதி (சொல்லடி அபிராமி)

1.37. ஆசையினாலே மனம் (ஆசையினாலே மனம்)** 

1.38. எண்ணம் வந்துனைத் தாக்கும் (உள்ளம் என்பது ஆமை** 

1.39. இன்பம் விரும்பும்(எண்ணப் பறவை சிறகடித்து)** 

1.40. மனதை அடக்கணும் (உலகம் பிறந்தது எனக்காக)**  RECORDED

1.41. இரவும் பகலும் தினமே(அமுதைப் பொழியும் நிலவே)** 

1.42. அந்த பெயர் வார்த்தை (அந்த சிவகாமி மகனிடம்)** 

1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)** 

1.44 to 46. நிர்விதர்க்கம் (நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி )** 

1.47. நீ நன்கு கொண்ட (என் அன்னை செய்த பாவம்)

1.48 to 1.51 நல்லது ரிதம்பரமே (அந்தரங்கம் நானறிவேன் )**  RECORDED

2. சாதன பாதம்

2.1. யாக பூஜைகள் எதற்கு (காதல் ராஜ்ஜியம் எனது) RECORDED

2.2.அன்புள்ள சாதகரே( அன்புள்ள மான் விழியே ) RECORDED

2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)** 

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்) RECORDED

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை) RECORDED

2.7.வேளைக்கொண்ணு தேடி-மனம் (ஆளுக்கொரு தேதி வச்சு)

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)

2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)

2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு) RECORDED

2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) ** RECORDED



  ** யோகத்தில் தாகம் (பாடல்கள்)







Wednesday, April 19, 2017

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) **



ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(2)
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு கேள்வி ஏதடா
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு வேள்வி ஏனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
அதே சாதனையில் வேதனையின் தடுப்பாம்
அதே சாதனையில் இரும்-உயிரின் துடிப்பாம்
(2)
அடே வேடமென வேறெதுவும் நடிப்பாம்
தரும் த்யானமதே இறைவடிவில் பிடிப்பாம்
(2)
வேஷம்-கொண்டு வெளியுலகில் ஆட்டம் ஏனடா
உன் இதயம் என்னும் கோயிலிலே தெய்வம் பாரடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
இறை நாட்டத்தினில் நீ புரியும் த்யானம் 
அதே நலம்-கொடுக்கும் என்று-சொல்லும் வேதம்
அதே உபநிடதம் எடுத்துரைக்கும் போதம்
அது கொடுத்திடுமே இறைவனுடன் யோகம்
அதை உரைத்திடுமாம் பதஞ்சலியின் யோகம்
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
தன் உள்ளுக்குள்ளே செல்பவனே மேதை
வெளியில் வேஷத்துடன் திரிபவனோ பேதை
அவன் மலரடியை நினைப்பதுவே த்யானம்
அது கடினமென்றால் மறதியொன்றே போதும்
உந்தன் வெளியுலக  மறதியொன்றே போதும்
வேஷம்-கொண்ட கோஷம்-தன்னில் அறிவு ஏதடா
வெறும் மௌனம்-கொண்ட த்யானம் ஒன்றே பெய்யும் தேனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே

வா ..வா..வா….. வா ..வா..வா….


----------------------------


Tuesday, April 18, 2017

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)




10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா: ||

முளையிலேயே களை எடு
* சாதனை பாதையில் தடைகளாக வரும் ஐந்து  சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
____________________-

கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
*ஐந்தெனவே ஐந்தெனவே இருந்திடும் எனத்தாம்மா
சொல்லிச்-சென்றார் சொல்லிச்-சென்றார் பதஞ்சலி பெருமானார்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
நிஜமறியாமை-ஒன்றாலே மதி-தடுமாறும் தன்னாலே (2)
யாரென்ற-போதும் உடலினில்-பற்றும் மரணத்தின்-பயமும் தோன்றும்
அறி..யாமை-ஒன்றாலே பலப்பலத்-தடைகள் சாதனை-வழியை மூடும்
 கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
ஆணவம்-ஆசையும் வந்தாலே யார் சொன்னாலும்-நல்லதைக்-கேளாதே  (2)
மனதினில்-வெறுப்பும் தோன்றிடும்-அதுவும் மயங்கிடுமே-கொஞ்சமேனும்
பின்னர் சாதனை-வழியில் சென்றிட-அதற்கு தோன்றிடுமா-எண்ணிப்பாரும்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா




2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)



வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(2)
என்பதுவே என்பதுவே பதஞ்சலி-பெருமானார்
சொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
காடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)
வாழ்ந்திடும்போதே பூமியில்-பலபேர் சாவதைக்-கண்டதனோடு
பல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
 (MUSIC)
எங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)
*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்
இந்த மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின் பயமும்
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா

*Auto biography of a Yogi Chapter 42 – Last days with my Guru

For a moment, Master trembled like a frightened child. ("Attachment to bodily residence, springing up of its own nature [i.e., arising from immemorial roots, past experiences of death]," Patanjali wrote,5 "is present in slight degree even in great saints." In some of his discourses on death, my guru had been wont to add: "Just as a long-caged bird hesitates to leave its accustomed home when the door is opened.")



2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு)


நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து (2)
(SM)
தூக்கம்-போலத் தான் சாவெனவே பகரும்-பலருக்கும் பயம்-எழுமே (2)
நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து
நெஞ்சில் எழுமே பயம் சாவைப் பார்த்து
 (MUSIC)
கொத்தும் பருந்தினிடம் எங்கோ பறந்திடினும்
என்றும் இரை-உயிர்க்குப் பயம்-விடுமா
(1+SM+1)
நித்தம்-பழகிடினும் பல்லில் விஷம்-இருக்க
பாம்பை-எப் பாம்பாட்டிதான் கொத்த-விடுவான்
நிற்பதில்லையே சாவின் கூத்து நெஞ்சில் பயமே பார்த்துப் பார்த்து

தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன் தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன்


2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)


9. ஸ்வரஸவாஹூ விதுஷோஸ்பி
ததாரூடோஸ பிணவேக  : ||

உயிரின் மீது  பற்று 
உயிரின் மீது  பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.
_______________________
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா
(MUSIC)
தொட்டால் சுடும்-பயம் நெருப்பாலே
தொடாமல் தெரியுது பின்னாலே
செத்தால் உடல்-பயம் எதனாலே
செத்தாச்சு பலதரம் அதனாலே
மரணம்-போக்குது உயிரம்மா
(MUSIC)
பிழைக்கணும் என்றே நினைத்திருக்கோம்
பயத்துடனே என்றும் வாழ்ந்திருக்கோம்
கொடுத்திடுவாய் என்றே எமன் கேட்டால்
எடுத்துச் செல்வாய் என்றா கொடுத்திடுவோம்
மரணம்-போக்குது உயிரம்மா
 (MUSIC)
உடலை-நினைத்தே வாழ்ந்திருக்கோம்
அது உலகில்-நிலைத்தே வாழ்ந்திடுமோ
முன்பே பலமுறை இ றந்திருக்கோம் அதில்
மரணத்தின் பயம்-நமை விடுவதில்லை
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா


Tuesday, August 23, 2016

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)


Click here for song

https://youtu.be/6rQCM1jo8T0



வெறுப்பு
துன்பம் தரும் அனுபவத்துடன் ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வது தான் வெறுப்பு.அதாவது, துன்பத்தினால் மனதில் வெறுப்பு தோன்றுகிறது.
________________

எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது மனமே
(1+SM+1)
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடிக்கணமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
மனித-குலம் போவதந்த இன்பத்தின்-பின்னே
மனித-குலம் போவதென்றும் இன்பத்தின்-பின்னே
அனுபவித்துப் பின்னுரைப்பார் உப்புச்-சப்பில்லே
என்றைக்கும்சிற்..றின்பத்துள்ளே துன்பங்கள்-ஒன்றே
என்பதனை அறிந்த பின்னே துன்பங்கள் இல்லே
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
அகங்கார நினைவிருக்கும் ஆணவத்திலே
தன்மையும்போய் இருண்டிருக்கும் அதனிடத்திலே
உடனே-அது தன் குறையை உணர்வது-ஏது
மனதுக்குத்தான் மறதி என்று மாபெரும் கேடு    
இன்பத்திலும் துன்பம் உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
நமை-உணர்த்த அன்றோ-அந்த மனம்-பிறந்தது
*சேற்றில்-பொந்த பன்றி-என்றே தனை-மறந்தது
தனை-மறந்த இந்திரன்போல் இன்பம்-தேடுது
** உண்மை-இன்பம் என்னவென்று மறந்து-போனது   
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு மனமே
(MUSIC)
கண்ணிருந்தும் பார்வை-சென்ற தன்மை-கொண்டது
அதனால்-தான் துன்பத்தைப்-போய் இன்பம் என்குது
பொன்னாக பொற்குடத்தில் நீரும் ஆகுமா
பானை-அந்த மண்ணென்றாலும் நீரும் மாறுமோ
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-மனமே
எதற்கோ நீ ஆவல்-கொண்டு அலைவது-மனமே
இன்பத்திலும் துன்பம்-உண்டு அறிந்திடு-உடனே


**அறியாமை இருட்டு உடனே விலகாது. பல பிறவிகளின் தீவிர சாதனையால் கிட்டும் இறை அருள்  தேவை.
**இந்திரன் சாபத்தினால் பன்றியாய்ப் பிறப்பெடுத்து சேற்றில் மூழ்கி அவ்வாழ்வை ரசித்து இருந்தான்
*** பேரின்பம்






Sunday, August 21, 2016

2.7.வேளைக்கொண்ணு தேடி-மனம் (ஆளுக்கொரு தேதி வச்சு)

(ஆளுக்கொரு தேதி வச்சு)


ஆசை
இன்ப அனுபவத்தை தொடர்வது தான் விருப்பம்/ஆசை எனப்படும். அது புறச் சூழ்நிலைகளினால் ஏற்படுகிறது என்ற அறியாமையும் தோன்றுகிறது.
____________________

நெஞ்சே உனக்கென்ன தீராத பசியோ 
நீ கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ 
கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ 

வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(1+SM+1)
அப்போ மான-வெக்கம் சொரணை-சூடு அதுக்கெங்கத் தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பூமியிலே பொறக்கையிலே வந்ததந்த கோரம் 
பூமி-விட்டு போறவரை போவதில்லை பாரும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பாழ்-மனதை நிறுத்திவைக்க யாராலே ஆகும் 
வேறு-வேறு இன்பத்தையே நில்லாமல் தேடும்  (2)
(SM)
இன்னொரு-பேர் இருக்கத்துக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு 
இன்னொரு-பேர் அதுக்கிருக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு
அடங்கிடுமா ஆசைப்-பசி அதுக்கு-என்ன லேசில் (2)
சத்துவிட்ட பொருளையெல்லாம் சுத்திக்கிட்டுத் திரியும் 
(1+ஆ..+1)
தன்னைப்-பத்தி அறியாத அதுக்கு-என்ன தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
அட மனம் அலையும்.. அட மனம் அலையும்
_________

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை)



அகந்தை
ஆன்மாவை மனமாகவும் உடலாகவும் புலன்களாகவும் காண்பது அகந்தை
__________

யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
(MUSIC)
எதற்கும்-நானே என்பதற்கே ஓர்விளக்கம் அன்றோ அறியாமை 
வேலையில்லாதவன் யார்-என்றால் அதற்கும்-நானே என்றிடுமாம்
முந்திரி போல் அது பதில் தருமாம்  
எதற்கும் நானே-நானே எனக்கூறும்-அறியாமை 
என் செயலும் தானே பாரேன் எனப் பேசும் அது-பெருமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை
(MUSIC)
சாகும்-போகும் உடலினையே அலையும்-தொலையும் மனதினையே 
யாதும்-அறியாப் புலன்களையே நான்-எனப் பேசும் அறியாமை 
தான்-எனும் அகந்தை அறியாமை 
உடலை-மனதைப்-புலனை தான் என்னும்-அறியாமை 
இதை உள்ளே அமர்ந்தே பார்க்கும் அந்த ஆன்மம் ஒரு-ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 



*சாட்சி பூதம்


Friday, August 19, 2016

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்)





பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(SM)
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(music)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும் மனம்-ஆடும்
(SM)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும்
அங்கம்-முழுதும் அது தந்தத்-திமிரால்-மது உண்ட மந்தியெனத் திரிந்தாடும் 
மது உண்ட மந்தியென மனமாடும் 
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(MUSIC)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும் உனைத்தாக்கும்
(SM)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும்
நன்மை-உரைக்கும்-உந்தன் நல்ல-முகத்தில் சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
_____________

Thursday, August 18, 2016

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)


அறியாமை - அறிவு சம்வாதம்


அத்தனையும் நானறிவேன் என்பதல்ல-பே..ரறிவு
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை
சாத்திரத்தை நான்-படித்தேன் கரைத்ததைக் குடித்துவிட்டேன்
சாத்திரத்தை நான்-படித்தேன் நானறியா நூல்கள்-இல்லை
கண்டபடி நான்-படித்தேன் பண்டிதனைப் போல-நன்றாய் (2)
அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே
(MUSIC)
பாரில்-கண்ட நூல்களிலே நீயும்--கற்ற கல்வி
தனில் ஒன்றும்-இல்லை மண்ணும்-இல்லை ஐயோ அது தோல்வி   
(2)
அறிந்து-விட்டேன் யார்-புகழும் தேவை-இல்லை போங்கள் (2)
என்-மேல்-பொ..றாமையினால் கூறுகிறீர்-நீங்கள்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா 
அத்தனையும் நானறிவேன் என்பதல்ல பேரறிவு
(MUSIC)
உண்மை-எது பொய்மை-எது நன்மை-தீமை யாது
என அறியாத நிலைமையன்றோ ஐயா-அறியாமை
வாலறிவன் தாள்-பணிந்து நல்..லறிவைத் தேடி
தன்னைத் தான்-உணர்ந்து கரைந்து-செல்ல வேணும் உந்தன்-ஆவி
அறிவேனே நான்-எதையும் அறிந்த-வரை போதும் (2)
உடனே போய் பைத்தியமே வைத்தியரைப் பாரும்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா
அத்தனையும் நானறிவேன் என்பதன்றோ அறியாமை

அத்தனையும் நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே

______________

2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)




மனமே-உன் சாதனையில் எத்தனையோ தடை-இருக்கு 
விழுந்தால் அவன் காலடியில் இனி-உன்னதெல்லாம் அவன்-பொறுப்பு 
உன்னதெல்லாம் அவன் பொறுப்பு
(Short music)


என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு
உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
செய்வாயா..!
என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு

உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
(2)
(MUSIC)

சாதனைக்குச் சோதனையாய் தடைகள்-ஐந்து உனைத்தாக்கும் 
அறியாமை ஆசை-பயம் ஆணவமும் வெறுப்பாகும் 
இந்த-ஐந்தும் உள்ளவரை உள்ளிருக்கும் உன்-நிஜத்தை
காணுவதும் ஆகாது என்றுணர்ந்து நீ-தேறு
என்-மனமே-கொள் யோகம்-தனை-நீ சிந்திக்க நேரம்-எடு
உந்தன் சாதனையில்-நீ தடை-முறிக்கச் சென்று ஐயனின் பாதம்-தொடு
செய்வாயா..
(MUSIC)
அறியாமை உனை-மயக்கும் மரண-பயம் அச்சுறுத்தும் 
ஆணவமே தலை-காட்டும் உண்மை-எண்ணிப்பாராமல்
வெறுப்புனையே சுடுமாமே ஆசை-என்றும் விஷப்-பாம்பே
இந்த ஐந்தும்-தாக்காமல் கொள்வாய்-நீ சாதனையை
கொள்வாய் நீ சாதனையை

__________

2.2.அன்புள்ள சாதகரே( அன்புள்ள மான் விழியே )




அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினில் இல்லையென்றால் தடை விலக்குதல் மிகக்கடினம்
(Short Music)
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினைக்-குறித்திருந்தால் தடை விலக்குதல் எளிமைப் படும்
(MUSIC)
மரக்கலம்-போமா மலை உச்சிக்கே
நடைவண்டி ஆமா  நீந்தத் தண்ணிக்கே
(2)
உயர்ந்த-நோக்குடன் இயந்த பாதையும்
புரிந்த-செயல்களும் இருந்து ஆகணும்
எண்ணம்-முழுதிலும் இதனை-வைக்கணும்
நோக்கம்-நாடியே செயலை-அமைக்கணும்
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அது இலக்கினில் இல்லையென்றால் தடை விலக்குதல் மிகக்கடினம்
(MUSIC)
சொல்லுது-பாரேன் சூத்திரம்-தான்
அதை உணர்ந்தாலே பர-சுகம் தான்
(2)
இதில்-இருப்பது வேதமல்லவோ
இதை-உணர்வது வேணுமல்லவோ
யோகப் பொன்மொழி நன்மையல்லவா
நாளை காட்டிடும் நம்மையல்லவா
அன்புள்ள சாதகரே சாதனை செய்திடணும்
அதை-இலக்கினில் இயைத்திடுவோம்
நமை இறைவனில் இணைத்திடுவோம்

________________